முடிவுக்கு வரும் செம்பருத்தி சீரியல்.! இதுதான் கிளைமாக்ஸ் வைரலாகும் வீடியோ.!

ஒவ்வொரு தொலைக்காட்சியும் டிஆர்பி யில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக புதுப்புது சீரியல்கள் ரியல் ஷோக்கள் என ஒளிபரப்பி வருகிறார்கள் அந்த வகையில் ஒவ்வொரு தொலைக்காட்சியும் தங்களுடைய சீரியலில் புதுப்புது யுத்தியை கடைப்பிடித்து வருகிறார்கள். அப்படிதான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த ஐந்து வருடங்களாக ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் செம்பருத்தி இந்த சீரியல் இந்த வாரத்தோடு முடிவுக்கு வர இருக்கிறது.

2017 ஆம் ஆண்டு செம்பருத்தி சீரியல் தொடங்கப்பட்டது இந்த சீரியல் நீண்டகாலமாக டிஆர்பி யில் முதலிடத்தில் இருந்து வந்தது ஆனால் இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வந்தார் கார்த்தி அவர் சீரியலை விட்டு விலகியதும் டிஆர்பி யில் அடி வாங்கியது. கடந்த ஐந்து வருடங்களாக ஒளிபரப்பப்பட்டு வந்த இந்த சீரியல் இந்த வாரத்தோடு முடிவடைய இருக்கிறது.

31 ஜூலை 2022 இல்  இந்த சீரியல் முடிவடிய இருக்கிறது மேலும் இந்த சீரியல் மதியம் ஒரு மணி முதல் 5 மணி வரை கிளைமாக்ஸ் காட்சியில் பார்வதியாக நடிக்கும் ஷாபனா ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் பார்வதியின் நெற்றியை பார்த்தால் உங்களுக்கே தெரியும் அவர் நெற்றியில் குங்குமம் வைத்துள்ளார். லாஸ்ட் டே  ஆப்டர் லாஸ்ட் சூட்  என்ற பதிவை பதிவிட்டுள்ளார்.

cinema
cinema

அதுமட்டுமில்லாமல் செம்பருத்தி சீரியல் ஆதி கேரட்டரில் நடித்து வரும்  அக்னீ டப்பிங் வீடியோவை வெளியிட்டுள்ளார்.  அந்த டப்பிங் இல் அகிலாண்டேஸ்வரி மற்றும் பார்வதியை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய பிறகு அவர் பேசும் வசனம் தான் இடம் பெற்றுள்ளது இந்த ஆடியோவை பார்த்தால் செம்பருத்தி சீரியல் கிளைமாக்ஸ் எப்படி இருக்கும் என யூகிக்க முடிகிறது.

கிளைமாக்ஸ் காட்சியில் பார்வதி மற்றும் அகிலாண்டேஸ்வரியை ஆதி காப்பாற்றுகிறார் என்பது உறுதியாகி உள்ளது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 

Leave a Comment