முதல் முறையாக தன் காதலனை வெளியுலகதிற்க்கு காட்டிய செம்பருத்தி சீரியல் நடிகை.? வைரலாகும் புகைப்படம்.

ஜீ தமிழில் மாபெரும் வெற்றி கண்ட தொடராக விளங்கி வருகிறது செம்பருத்தி சீரியல். TRP யில் சாதனை எல்லாம் படைத்த இந்த தொடருக்கு பார்வையாளர்கள் குறைந்து கொண்டே வருகின்றன.

இந்தத் தொடரில் நடித்த நடிகர் ஆதி தற்போது சினிமாவில் ஓரிரு திரைப்படங்களில் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது. இதனிடையே நடிகர் ஆதி  நான் ரொம்ப கஷ்டத்திலே இருக்கிறதாகவும் எனக்கு யாராவது பணம் கொடுத்து உதவுங்கள் என்று வீடியோவும் அப்போது வைரலானது.

பிறகு செம்பருத்தி சீரியல் குழுவினர் இந்தத் தொடரை விரைவில் முடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தொடரின் மூலம் தமிழ் மக்களின் மனதை கொள்ளை கொண்டார் நடிகை ஷாபனா.

இவர் பாக்கியலட்சுமி என்ற தொடரில் நடித்து வரும் நடிகர் ஆரியன் என்பவரை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இவர்தான் தன் காதலன் என்று இதுவரைக்கும் அவர் கூறாத நிலையில்  இவர்கள் இருவரும் இணைந்து உள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் இவர்கள் இருவரும் ஒன்றாக நின்றுகொண்டிருக்கும் புகைப்படம் தான் அது.

இதனை பார்த்த ரசிகர்கள் அருமையான ஜோடி என்று கமென்ட் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். சின்னத்திரையில் நடித்து கொண்டிருக்கும் நடிகர் மதன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி உள்ளது.

இதோ அந்த புகைப்படம்.

shabana

Leave a Comment

Exit mobile version