“திருச்சிற்றம்பலம்” படத்தைப் பார்த்துவிட்டு தனது விமர்சனத்தை கொடுத்த செல்வராகவன் – என்ன இப்படி சொல்லிட்டாரு..

சினிமா உலகில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்ற பிறகு நடிகர்கள் பலரும் தனது திறமையை இன்னும் சிறப்பாக வளர்த்துக் கொண்டு  ஆக்சன் மற்றும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்வது நடிப்பது வழக்கம் அந்த வகையில் நடிகர் தனுஷும் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி அசத்தி வருகிறார்.

இருப்பினும் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜகமே தந்திரம், மாறன் போன்ற படங்கள் சொல்லிக்கொள்ளும்படி வெற்றியை ருசிக்கவில்லை.. இதிலிருந்து தன்னை மாற்றிக் கொள்ள சிறந்த இயக்குனருடன் கதை கேட்டார் அந்த வகையில் இயக்குனர்  மித்திரன்  ஆர் ஜவகர் சொன்ன கதை தனுஷுக்கு ரொம்ப பிடித்துப் போகவே உடனடியாக திருச்சிற்றம்பலம் படம் உருவானது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷின்  திருச்சிற்றம்பலம் திரையரங்கில் வெளியானதால் ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர் படம் தற்பொழுது நல்ல விமர்சனத்தை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் தனுஷ் உடன் கைகோர்த்து நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்து அசத்தி இருந்தனர்.

இந்த படத்தை தற்போது ரசிகர்களையும் தாண்டி சினிமா பிரபலங்களும் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் தனுஷின் அண்ணனும், இயக்குனருமான செல்வராகவன் திருச்சிற்றம்பலம் படத்தை பார்த்துவிட்டு தனது கருத்தை twitter பக்கத்தில் சொல்லி உள்ளார் அதில் அவர் கூற வருவது.

என்ன ஒரு அழகான படம்.. இப்படி ஒரு பீல் குட் படத்தை சமீபத்தில் நான் பார்த்ததே இல்லை.. தனுஷ்,நித்தியா மேனன், பாரதிராஜா மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பு மெய்சிலிர்க்க வைத்துவிட்டது அனிருத்தின் அந்த இசை அப்படியே  ரசிக்க வைத்து விட்டது என தம்பி தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்திற்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இச்செய்தி இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Leave a Comment