D50-வது படத்தில் சம்பவம் செய்ய காத்திருக்கும் செல்வராகவன்.! எகிறும் எதிர்பார்ப்பு.. அவரே சொன்ன தகவல்…

தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ் இவர் தற்போது கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று . இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மற்றும் நானே வருவேன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதனை அடுத்து இவர் நடிப்பில் உருவான வாத்தி திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாக தயாராகி இருந்தது ஆனால் ஒரு சில பிரச்சினையின் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போனது அந்த வகையில் வாத்தி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழியில் வெளியான வாத்தி திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

இதை தொடர்ந்து அடுத்ததாக கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர் மத்தியில் அதிகரித்திருக்கிறது ஏனென்றால் இந்த திரைப்படம் ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக்கி வருவதால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது.

இதனை அடுத்து அடுத்ததாக D50 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தை தானே இயக்கி நடிக்க இருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்து இருக்கிறது இந்த நிலையில். தனுஷின் அண்ணன் இயக்குனர் செல்வராகவன் அவர்கள் இந்த படத்தின் கதை எனக்கு நன்றாக தெரியும் அது மட்டும் அல்லாமல் கதை மிகவும் அருமையாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்து விட்டதால் நான் முதலில் சொன்ன வார்த்தை இது தான் என்று கூறியுள்ளார் அதாவது இந்த கதை எனக்கு பிடித்த உடனே நானும் இந்த படத்தில் நடிக்கிறேன் என்று கூறினேன். அது மட்டும் இல்லாமல் ஒரு கதாபாத்திரத்தை குறிப்பிட்டு கூறியுள்ளார் என்று கூறபடுகிறது.

Leave a Comment