மணிரத்தினத்துடன் களத்தில் மல்லு கட்ட போகும் செல்வராகவன்..! விழி பிதுங்கி நிற்கும் தனுஷ்..!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் மணிரத்தினம் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் தன்னுடைய கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை மிக பிரம்மாண்டமாக இயக்கி உள்ளார்.

இவ்வாறு இந்த திரைப்படம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கும் நிலையில் பொன்னியின் செல்வம் வெளியாவதற்கு முதல் நாள் தனுஷின் தானே வருவேன் திரைப்படம் வெளியிடலாம் என நானே வருவேன் பட குழுவினர்கள் முடிவு செய்துள்ளார்கள்.

சமீபத்தில் தான் நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது அந்த வகையில் தற்பொழுது நானே வருவேன் திரைப்படத்தை தைரியமாக விடலாம் என தயாரிப்பாளர் கலை புலி தானு அவர்கள் முடிவெடுத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அதற்கு முதல் நாள் இந்த திரைப்படத்தை  வெளியிடுவதன் மூலமாக பொன்னியன் செல்வன் திரைப்படத்தை பார்க்க வருபவர்களும் இந்த திரைப்படத்தை பார்ப்பார்கள் என சரியாக பிளான் போட்டு காய் நகர்த்துகிறார் நமது தயாரிப்பாளர்.

ஆனால் தற்பொழுது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் அதிகரித்து வருவதை நமது தயாரிப்பாளர் பார்த்ததும் அவசரப்பட்டு நாம் இந்த திரைப்படத்தை விட்டுட்டோமா என  வருந்தி வருகிறார் மேலும் தன்னுடைய நெருக்கமானவர்களுக்கு  வருவேன் திரைப்படத்தை போட்டு காட்டி உள்ளார்.

இதைப் பார்த்த பிரபலங்கள் இந்த திரைப்படம் ஆளவந்தான் திரைப்படத்தின் பாதி கதை இருப்பது போல தெரிகிறது இரண்டாம் பாதியில் வாலி படத்தின் கதையை போல் இருப்பதாக கூறி உள்ளார்கள் இதை பார்க்கும் பொழுது அண்ணனின் மனைவியை தம்பி அடைய விரும்புகிறார் அதற்காக முயற்சியில் ஈடுபடுகிறார்.

பின்னர் இருவருக்கும் ஏற்படும் பிரச்சனை தான் இந்த திரைப்படத்தின் கதை என  கூறியுள்ளார்கள் கதை இப்படி இருக்கும் நிலையில் யோசிக்காமல் படத்தின் வெளியிட்ட தேதியை அறிவித்து விட்டோம் என யோசனையில் உள்ளாராம்.

Leave a Comment