அம்மா மடியில் படுத்து உலகத்தை மறந்து தூங்கும் செல்வராகவன்.! அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

தமிழ் சினிமாவிற்கு வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து தன்னை மிகப்பெரிய அளவில் பிரபலப்படுத்த கொண்டவர் இயக்குனர் செல்வராகவன்.

இவர் இயக்கிய ஒவ்வொரு திரைப்படமும் சினிமாவில் யாரும் எடுக்காத கதைக்களமாக இருப்பதோடு அந்தப்படம் மக்களை வெகுவாக கவர்ந்து மிகப்பெரிய அளவில் ஹிட் அடிப்பதும் வழக்கம்.

அப்படி 2002ஆம் ஆண்டு தனது பயணத்தை தொடர்ந்த செல்வராகவன் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்க தொடங்கினார்.

செவன் ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற படங்கள் இன்னும் மக்களுக்கு பெரும் பலமாக இருந்து வருகிறது.

ஆரம்பத்தில் வருடத்திற்கு ஒரு திரைப்படத்தையாவது கொடுத்துவந்த செல்வராகவன் சமீபகாலமாக மூன்று வருடத்தில் ஒரு படங்களையாவது கொடுத்து வருகிறார் அந்த வகையில் இவர் கடைசியாக இயக்கிய திரைப்படம் என் ஜி கே.

இந்த திரைப்படம் சொல்லிக்கொள்ளும் படி வெற்றியை பெறவில்லை இந்த நிலையில் அவர் கீர்த்தி சுரேஷுடன் இணைந்துசாணி காயிதம் என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகி நடித்து வருகிறார் இது ஒரு பக்கமிருக்க ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என பலர் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அதையும் இயக்க தற்போது களத்தில் இறங்கி உள்ளார்.

அதனை வெளிக்காட்டும் விதமாக அதிகாரபூர்வமாக இத்திரைப்படம் 2024 வெளிவரும் என கூறினார்.

ஏன் இவ்வளவு தாமதம் என்று பார்த்தால் இதற்கு முன்பாகவே ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாக தெரியவருகிறது.

மீண்டும் தமிழ் சினிமாவிற்கு நான் யார் என்பதை வெளிக்காட்ட தொடர் படங்களில் நடித்தும், இயக்கம் வருவதால் செல்வராகவனை பின்பற்றுவோர் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் அவர் தனது அம்மா மடியில் படுத்து உறங்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது இதை அவரது சகோதரி சமூகவலைதளத்தில் பரப்பி உள்ளார்.

இதோ அந்த புகைப்படம்

selvaragavan
selvaragavan

Leave a Comment