ஏன்பா தோனி அப்ப என்னமோ ஸ்லோவா இருக்கான் வேணான்னு சொன்ன இப்ப எதுக்கு இவர சிஎஸ்கே டீம்ல ஆட வைக்கிற. சரமாரியாக கேள்வி எழுப்பிய ஷேவாக்…

ரகானே மிகவும் ஸ்லோவாக ஆடுகிறார் அதனால் அவர் அணியில் வேண்டாம் என அப்பொழுது தோனி கூறியுள்ளார் ஆனால் அதே தோனி தற்பொழுது எதற்காக ஐபிஎல் லில் எடுத்து ஆட வைக்கிறார் என கேள்வி எழுப்பி உள்ளார் ஷேவாக்.

வீரர் ரகானே கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற மினி ஏலத்தில் 50 லட்சம் கொடுத்து சிஎஸ்கே அணிக்கு எடுக்கப்பட்டார். ஆனால் அவரை முதல் இரண்டு லீக் போட்டியில் தோனி விளையாட வைக்கவில்லை. பின்பு மும்பை இந்தியன்ஸ் எதிராக மூன்றாவது லீக் போட்டியில் பென்ஸ் ஸ்டோக்ஸ் மற்றும் மொயின் அலி ஆகியோர்கள் டீமில் இல்லாததால் ரஹானே பிளையிங் லெவலில் இடம் கொடுத்தார்கள் ஆனால் தனக்கு கொடுத்த இடத்தை தரமாக நிரப்ப வேண்டும் என என்னி அதிவேகமாக வெறும் 19 பந்துகளில் அரை சதத்தை அடித்து விலாசினார்.

ரகானே 27 பந்துகளில் 61 ரன்கள் எடுத்திருந்தார். இதனால் பல வீரர்கள் பிரம்மித்தார்கள் அதுமட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் இவரின் ஆட்டம் மிகவும் பிடித்து விட்டது இவரின் ஆட்டம் சென்னை அணி வெற்றிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது. இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு லிமிடெட் ஓவர்களில் முன்னணி வீரராக இருந்த ரகானே அப்பொழுது இருந்த கேப்டன் தோனியால் வெளியே அனுப்பப்பட்டார்.

ஆனால் அதற்குப் பின் வந்த விராட் கோலி  ரஹனேவை அணியில் எடுக்க முன்வரவில்லை இவர் மிகவும் ஸ்லோவாக ஆடுகிறார் அதனால் தான் யாரும் இவரை எடுக்கவில்லை என தோனி ஒரு காரணத்தை முன்னிறுத்தினார். இந்த நிலையில் முன்னாள் இந்திய வீரர் விரேந்திர சேவாக் தன்னுடைய விமர்சனத்தை கூறுகையில்  அப்பொழுது ஸ்லோவாக இருக்கிறார் என்று அணியில் இருந்து வெளியே அனுப்பிய தோனி இப்பொழுது ரகானே விடம் என்ன கண்டார்.

ஏன் அவரை விளையாட வைக்கிறார் அப்பொழுதும் இப்பொழுதும் தோனி தான் கேப்டன் அதனால் கேட்கிறேன்  அப்பொழுது தோனி விளையாட வைக்கவில்லை, ஆனால் இப்பொழுது தோனி விளையாட வைக்கிறார் ரஹானாவை இதற்கு என்ன காரணம்.

மேலும் ரகானே   குறித்து தோனி பேசுகையில் ரஹானே சிஎஸ்கே அணியில் எடுக்கப்பட்ட பிறகு அவரிடம் பேசினேன் உன்னிடம் இருந்து எனக்கு இதுதான் வரவேண்டும் வேறு எந்த அழுத்தத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டாம் மைதானத்திற்குள் இறங்கி என்ஜாய் செய்யலாம் என்ன நடந்தாலும் அணி நிர்வாகம் உனக்கு பக்கபலமாக இருக்கும் நானும் பக்கபலமாக இருப்பேன் என கூறினாராம்

Leave a Comment