80,90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை மீனா தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் பிரபலமடைந்தார். மேலும் இவருடைய வசீகரமான உடலமைப்பு, முக அழகு போன்றவை ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்தது எனவே ஒரு கட்டத்திற்கு பிறகு ரசிகர்களின் கனவு கண்ணியாக இருந்து வந்தார்.
இவ்வாறு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்கள் நடித்த பிசியாக இருந்து வந்த இவன்6 குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இவருக்கு திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்பு குறைந்ததால் பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இந்த தம்பதியினர்களுக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார் நைனிகா விஜயின் தெறி திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்தார்.
இப்படிப்பட்ட நிலையில் மீனா சமீப காலங்களாக ஹீரோயினாக இல்லை என்றாலும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களில் நடித்த வருகிறார். அந்த வகையில் கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடிகை மீனாவின் கணவர் உடல் நலக்குறைவால் இறந்த நிலையில் இவர் மிகவும் சோகமாக இருந்து வந்தார் எனவே இவரை மகிழ்ச்சி படுத்த வேண்டும் என்பதற்காக இவருடைய தோழிகள் சங்கீதா, கலா மாஸ்டர், ரம்பா உள்ளிட்ட பலரும் இணைந்து அவருடைய மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்கள். எனவே மீனாவும் தன்னுடைய பழைய நிலைக்கு திரும்பி வருகிறார்.
இந்நிலையில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ஏராளமான முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணியில் உருவான திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இது குறித்து நடிகை மீனா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு வைரலாகி வருகிறது.
அதாவது ‘இனிமேலும் என்னால் இதை ரசிக்காமல் வைத்திருக்க முடியாது, இது என்னை திணறடிக்கிறது, மனதை விட்டு சொல்லியே ஆக வேண்டும், எனக்கு பொறாமையாக உள்ளது, பொன்னியின் செல்வன் படத்தில் என்னுடைய கனவு கதாபாத்திரமான நந்தினியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் மீது வாழ்க்கையில் முதன்முறையாக பொறாமை கொள்கிறேன், பட குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்’ என பதிவு செய்துள்ளார்.