ஈரமான ரோஜா சீரியல் நடிகர் அஜித்தைப் பற்றி என்ன கூறியுள்ளார் பாருங்கள். !

eramana roja serial actor has to say about Ajith. !விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜா என்ற சீரியலில் நடிக்கும் ஜெமினி மணி அஜித்தின் தீவிர ரசிகராம். இவர் அஜித்துடன் இணைந்து கிரீடம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அஜித்தின் மீது கொண்ட தீவிர பாசத்தினால் அஜித்தின் பட பெயரை தனது கையில் பச்சை குத்தி கொண்டுள்ளாராம்.

இவர் அளித்த பேட்டி ஒன்றில் நான் ஜெமினியில் வேலை செய்தபோது அஜித்துக்கு தான் அதிகம் வேலை செய்வேன். அவர் வீட்டுக்கு சென்றபோது அஜித் என்னிடம் சினிமா எல்லாம் வேண்டாம் அது ரொம்ப கஷ்டம் உனக்கு குடும்பம் இருக்கு அதை விட்டுவிட்டு வேலைய பாரு என்று சொன்னாராம்.

அஜித் வீட்டில் இருக்கும்போது எப்போதும் சட்டை இல்லாமல் ஷார்ட்ஸ் தான் இருப்பாராம். அவர் வீட்டில் இருக்கும் போது எப்போதும் மிக அமைதியாக தான் இருப்பாராம், வேகமாக கூட பேச மாட்டாராம். அவரை யாராவது டிஸ்டர்ப் செய்தாள் அவருக்கு பிடிக்காது, அதிகபட்சமாக கோபம் வந்தால் ஸ்டுப்பிட் என்கிற வார்த்தையை பயன்படுத்துவாராம். இப்படிதான் அவர் இருப்பாராம்.

சீரியல் நடிகர் ஜெமினி மணி தான் வீட்டுக்கு போவதாக அஜீத்திடம் கூறியபோது அவரிடம் வெறும் 2000 ரூபாய் பணம் தான் இருந்தாம் உடனே அவரது உதவியாளரை அனுப்பி எட்டாயிரம் எடுத்து வரச்சொல்லி ஜெமினிக்கு கொடுத்தாராம். அஜித் மற்றவர்களின் நிலையை உணர்ந்து தானாகவே முன்வந்து அவர்கள் கேட்பதற்கு முன் அவர்களுக்கு தேவையான உதவியை செய்வதில் வல்லவர் என்று இவர் கூறியுள்ளார்.

Leave a Comment