விவேக்கின் லட்சியத்தை நிறைவேற்றிய சிம்பு மற்றும் மாநாடு படகுழு.!பாராட்டும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகளாக சின்ன கலைவாணர் என்ற பட்டத்தோடு வலம் வந்தவர் தான் விவேக் இவர் பல வருடங்களாக ரசிகர்களை சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்து வந்த பின்பு அவர் திரைப்படங்களில் சமூக அக்கறை காட்டும் வகையில் ஒரு கருத்தையும் கூறி வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

str
str

இவர் கடந்த 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக இந்த மண்ணை விட்டு மறைந்து விட்டார் அவர் நினைவாக தற்போதும் பல ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் போன்றோர் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர் சொன்ன சமூக அக்கறை காட்டும் கருத்துகளை கடைபிடித்து வருகிறார்கள்.

மேலும் விவேக்கின் நிறைவேறாத ஆசையாக இருப்பது ஒரு கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்பதுதான் ஆனால் விவேக் இருந்தபொழுது முப்பத்தி மூன்று லட்சத்திற்கும் மேலான மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார்.

str2
str2

அவரது நினைவாக ரசிகர்கள்,மக்கள்,சினிமா பிரபலங்கள் போன்றோர் அவரது ஆசையை நிறைவேற்றும்படி மரக்கன்றுகளை நட்டு வருகிறார்கள் அந்த வகையில் தற்பொழுது மாநாடு திரைப்படத்தில் நடித்து வரும் சிம்புவும் படக்குழுவினரும் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளனர்.

str3
str3

சமீபத்தில்கூட அருண்விஜய்ம்,விஜயகுமார் ஆகிய நட்சத்திரங்கள் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மரக்கன்றுகளை நட்ட புகைப்படங்கள் வெளியானது இந்நிலையில் மாநாடு திரைப்படத்தில் பணியாற்றிவரும் பிரேம்ஜி,வெங்கட்பிரபு, சிம்பு,பைட் மாஸ்டர் போன்ற பல நட்சத்திரங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது புகைப்படத்தை வைத்து மரக்கன்றை நட்டு உள்ளார்கள்.மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Comment