நமிதா மாரிமுத்து “பிக்பாஸ்” வீட்டை விட்டு வெளியேறிய பின் அவர் செய்த வேலையை நீங்களே பாருங்கள் – வீடியோ இதோ.

உலகநாயகன் கமலஹாசன் தற்போது சின்னத்திரை பக்கம் அடி எடுத்து வைத்து மக்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறார் அந்த வகையில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை 4 சீசன்கள் சிறப்பாக தொகுத்து வழங்கிய நிலையில் ஐந்தாவது சீசனையும் தற்பொழுது ஆரம்பித்துள்ளார் .

இதில் தற்போது 18 போட்டியாளர்களில் ஒருவரான நமிதா மாரிமுத்து மட்டும் வெளியேறி உள்ளதால் மீதி 17 பேர் தற்பொழுது விளையாடிக் கொண்டிருந்த நிலையில் முதல் வாரத்தை தொடர்ந்து அடுத்த வாரத்திலேயே நாடியா என்ற ஒரு பிரபலமும்  பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.

இதை தொடர்ந்து இனி பிக்பாஸ் வீட்டில் போட்டிகள் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இப்ப தான் பிக்பாஸ் தனது விளையாட்டை விளையாட ஆரம்பித்து வைத்துள்ளது இனிமேல் வீட்டில் சண்டை சச்சரவும் ஆக இருக்கும் என கூறப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மாடல் அழகி நமீதா மாரிமுத்து வெளியேறியதற்கான முக்கியகாரணம் உடல்நலக்குறைவால் தான் அவர் திடீரென இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. மேலும் அவர் பிக்பாஸ் வீட்டில் அவர் கதையை கேட்ட மக்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவாக மாறினார் .

அவர் இருந்திருந்தால் நிச்சயம் பிக்பாஸ் வீட்டில் நல்லதொரு இடத்தைப் பிடித்து இருப்பார் என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் எதிர்பாராவிதமாக அவர் போய் விட்டார் என்பதே ரசிகர்களின் வருத்தமாக இருக்கிறது .இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நமீதா தற்போது தெருவில் வசித்து வருபவர்களுக்கு உடை வாங்கி கொடுத்து உதவி செய்துள்ளார். அந்த வீடியோ இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.

Leave a Comment

Exit mobile version