விவேக்கை பற்றி உருக்கமான பதிவை வெளியிட்ட ஆவாஸ் அஞ்சிங் செல் முருகன்.!

காமெடி நடிகர் விவேக் மறைந்ததிலிருந்து அவரைப் பற்றிய பல்வேறு சினிமா பிரபலங்கள் தங்களது வருத்தத்தை சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் தெரிவித்து வந்தார்கள் அவர்கள் பகிர்ந்த பதிவானது ரசிகர்களின் நெஞ்சை உருக்கி விட்டது என்று தான் கூற வேண்டும்.

மேலும் விவேக்குடன் நெருக்கமாக நடித்த செல் முருகன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் விவேக்கை பற்றி மறக்க முடியாமல் ஒரு பதிவை பகிர்ந்து ரசிகர்களின் மனதை உருக்கி விட்டார்.

அதில் அவர் அவரைத் தவிர எனக்கு வேறு யாருமில்லை சிலர் ஸ்டேட்டஸில் புகைப்படம் வைப்பார்கள் சிரிப்புடன் கடந்து போவார்கள் சிலர் ஆழ்ந்த இரங்கலை கடந்து போவார்கள் சிலர் கண்ணீர் குறியீட்டுடன் கழண்டு கொள்வார்கள் ஆனால் அண்ணா உண்மையான ஜீவன் உன் உயிர் தோழன் என் முருகனை விட்டுவிட்டு கடவுள் முருகனை காண காற்றில் கரைந்து விட்டாயே.

இங்கு எல்லாருமே முருகன்தான் துணை என்பார்கள் இனி என் முருகனுக்கு யார்? துணை விடை இல்லாமல் விரக்தியில்கேட்கிறேன்? இனி அவனுக்கு யார் துணை,யார் துணை,யார் துணை என பதிவிட்டு ரசிகர்களின் மனதை உருக்கி விட்டார் செல் முருகன்.

cell murukan
cell murukan

மேலும் இவர் பகிர்ந்த பதிவானது தற்போது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி  வருவது மட்டுமல்லாமல் இந்த பகிர்வை விவேக்கின் ரசிகர்கள் இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment