நினைவுகளை மறக்க முடியாமல் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு பாட்டு பாடி தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த சூப்பர் சிங்கர் பிரபலம்.!

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நடிகர்,வீடியோ பின்னணி பாடகர் என பல திறமைகளைக் கொண்டு வலம் வந்தவர் தான் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இவர் தமிழ் திரை உலகில் பல திரைப்படங்களில் நடித்து பல திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடி மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கியவர்.

இவர் நடித்த நிறைய திரைப்படங்கள் ரசிகர்கள் மனதில் தற்போதும் அப்படியே இருக்கிறது அந்த வகையில் பார்த்தால் இவர் பாடிய பாடல்களும் தற்பொழுது வரை மக்களின் செல்போனில் ரிங்டோனாக இருக்கிறது என்று தான் கூற வேண்டும் அந்த அளவிற்கு இவர் தனது பாடல்களை முழுமையாக பாடும் திறன் கொண்டவர் என்பது சந்தேகமே இல்லை.

மேலும் இவர் கடந்தாண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி இந்த மண்ணை விட்டு மறைந்து விட்டார் அவரின் மறைவிற்கு பல சினிமா பிரபலங்களும் இரங்கலை தெரிவித்து வருவதுமட்டுமல்லாமல் தற்போது வரை மறந்ததை அவரது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்நிலையில் இன்று அவரது 75 ஆவது பிறந்தநாள் என்பதால் ரசிகர்களும் பல சினிமா பிரபலங்களும் அவரது புகைப்படம் மூலம் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள் அந்த வகையில் பிரபல பின்னணிப் பாடகியும், சூப்பர் சிங்கர் நடுவருமான சுவேதா மோகன் பாடல் மூலம் எஸ் பி பாலசுப்ரமணியம் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இவரைப் போலவே இன்னும் நிறைய சினிமா பிரபலங்கள் இவரது பிறந்த நாளை முன்னிட்டு புகைப்படங்களை வெளியிட்டு தன்னோடு இருந்த நினைவுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் ரசிகர்களும் இவர் பாடிய பாடல்களை எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

Leave a Comment