ராஜா ராணிக்கு பிறகு மீண்டும் நயன்தாராவுடன் இணைந்த சத்யராஜ்.! இதோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் தான் ராஜா ராணி இந்தத் திரைப்படத்தில் ஜெய்,நயன்தாரா,ஆர்யா,நஸ்ரியா,சந்தானம் போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்திருப்பார்கள். மேலும் இந்த திரைப்படம் வெளியான பொழுது ரசிகர்களிடையே ஏக போக வரவேற்பை பெற்றுவிட்டது.

குறிப்பாக கூற வேண்டும் என்றால் இந்த திரைப்படத்தில் வரும் அனைத்து சென்டிமென்ட் சீன்களும் ரசிகர்களை மிகவும் கவர்ந்து விட்டது.இதனைத் தொடர்ந்து ஜெய் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் தற்பொழுது இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளனர் நயன்தாரா 75 என்ற திரைப்படத்தில் இவர்கள் தற்பொழுது இணைந்து நடிக்க இருக்கிறார்கள்.

அறிமுக இயக்குனர் நீலேஷ் கிருஷ்ணா இந்த திரைப்படத்தை இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெய் இணைந்துள்ளார் என்பதை சமீபத்தில் தான் சமூக வலைதள பக்கங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.அதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் இணைந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே ராஜா ராணி திரைப்படத்தில் நயன்தாராவுக்கு அப்பாவாக சத்யராஜ் நடித்திருப்பார்.

மேலும் இந்த திரைப்படத்தில் சத்யராஜ் மட்டுமல்லாமல் ரேணுகா மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோரும் இணைந்துள்ளனர். இதனைத் தவிர்த்து பார்த்தால் ஒரு சில முக்கிய பிரபலங்களும் இந்தத் திரைப்படத்தில் இணைந்துள்ளார்கள் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க மீண்டும் ஜெய் மற்றும் நயன்தாரா கூட்டணியில் உருவாக இருக்கும் இந்த திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். அதற்கு ஏற்றது போல் இந்த திரைப்படத்தை பட குழுவும் பிரம்மாண்டமாக எடுப்பார்கள் என ரசிகர்கள் நம்பி வருகின்றனர். ஒரு சில ரசிகர்கள் இந்த திரைப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும் அதற்கு நாங்கள் வாழ்த்துகிறோம் எனவும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment