நாடோடி பட நடிகையை அடி உதை, பலான புகைப்படத்தை வெளியிட்டு பிளாக்மெயில் செய்யும் அமைச்சர்.! வாட்ஸ் ஆப் ஆதாரத்தை வெளியிட்ட சாந்தினி.

முன்னாள் அமைச்சர் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தற்பொழுது மிரட்டி வருவதாக நாடோடிகள் படம் நடிகை சாந்தினி தேவா பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். சசிகுமார் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம்தான் நாடோடிகள் இந்த திரைப்படத்தில் கஞ்சா கருப்பு, அபிநயா, அனன்யா, விஜய் வசந்த், என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தார்கள்.

இந்த திரைப்படத்தில் உள்ள காதல் ஜோடியை கண்டிப்பாக யாரும் மறந்திருக்க மாட்டீர்கள் ஏனென்றால் அந்த அளவு இந்த திரைப்படத்தில் வந்த காதல் ஜோடி முக்கியமான காதல் ஜோடியாக அமைந்தது. இந்த காதல் ஜோடியால் தான் சசி குமார் மற்றும் அவர்களின் நண்பர்களுக்கு வாழ்க்கையே பிரச்சனையாக மாறிவிடும்.

அப்படி இந்த காதல் ஜோடி பிரபா என்ற  கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் சாந்தினி இந்த திரைப்படத்திற்கு பின்னர் இவர் 2012ஆம் ஆண்டு வெளியாகிய 2ஜி ஸ்பெக்ட்ரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனாலேயே தற்பொழுது சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று சாந்தினி அதிமுக முன்னாள் அமைச்சர் மீது புகார் ஒன்றை கூறியுள்ளார்.

இதுகுறித்து சாந்தினி பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியபோது நான் மலேசியாவை சேர்ந்த பெண் சென்னையில் கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து தங்கி வருகிறேன் அதேபோல்தான் மலேசியா சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் தூதராக பணியாற்றிய பொழுது அடிக்கடி இந்தியா வந்து செல்வேன் 2017 ஆம் ஆண்டு மணிகண்டனை சந்தித்து அதன் பின்னர் அவர் எனக்கு அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் அழகாக இருப்பதாகவும் என்னை மிகவும் பிடித்திருப்பதாகவும் என்னை திருமணம் செய்து கொள்வதாகவும் என்னிடம் வாக்களித்தார்.

nadodikal actress
nadodikal actress

அதுமட்டுமில்லாமல் அவரது மனைவியால் தனக்கு எந்த சந்தோஷமும் இல்லை என உன்னைப் போன்ற ஒருவர் என் வாழ்க்கையில் வந்தால் என் வாழ்க்கை பிரகாசமாக மாறிவிடும் என்றும் கூறியுள்ளார் மேலும் சட்டப்படி திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதி கூறியுள்ளார். அதை நம்பி சாந்தினி ஒரே வீட்டில் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளார்கள் சென்னையில் இருந்த வரை இரவில் மணிகண்டன் சாந்தினி வீட்டில்தான் தங்குவார்எனக் கூறியுள்ளார்.

அது மட்டுமில்லாமல் வெளியே செல்வதாக இருந்தால் அமைச்சர் காரில் தான் செய்வேன் எனவும் சாந்தினி அந்த பேட்டியில் கூறியுள்ளார் இந்த நிலையில் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு திருமணம் செய்து கொள்வதாகக் கூறினார் அதனால் இரண்டு முறை நான் கர்ப்பமாக ஆனேன் ஆனால் திருமணத்திற்குப் பின்பு குழந்தை வேண்டாம் என தன்னுடைய கருவை கலைக்க சொன்னார்.

nadodikal actress
nadodikal actress

இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள முடியாது எனவும் இதை வெளியே கூறினால் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது அந்த அளவு மிகவும் மோசமாக மிரட்டியுள்ளார் ஆம் அதே போல் சாந்தினியின் அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைத் தளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி வருகிறாராம். மேலும் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி என் மீது வழக்கைப் போட்டு என் வாழ்க்கையை சீரழித்து விடுவேன் எனவும் மிரட்டுகிறார் என அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த நிலையில் வாட்ஸ்அப் ஆதாரங்களை தற்போது சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள இந்த ஆதாரம் வைரலாகி வருகிறது.

Leave a Comment