வாய் பேசமுடியாது, காது கேட்காத மாற்று திறனாளி அபிநயாவா இது.! இவரா நாடோடிகள் படத்தில் நடித்தார்.! வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியாகி திரைப்படம் நாடோடிகள் இந்த திரைப்படத்தில் கஞ்சா கருப்பு, அனன்யா, அபிநயா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்கள். இந்த திரைப்படத்தின் கதை அவரது நண்பர்கள் காதலை சேர்த்து வைப்பதும் அவர்கள் தவறான பாதையில் போகிறார்கள் என்பதை அவர்களுக்கு புரிய வைப்பது உணர்த்தும் திரைப்படமாக அமைந்தது.

இந்த திரைப்படத்தில் நடிகை அபிநயா நடித்திருந்தார் இவர் வாய் பேசாத காது கேட்காத ஒரு மாற்றுத்திறனாளி, இதனைத் தொடர்ந்து ஈசன், வீரம், பூஜை, தனி ஒருவன், குற்றம் 23 ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார், வாய் பேச முடியாது காது கேட்காது ஆனாலும் தனக்க கொடுக்கும் ரோல்களை மிகவும் சிறப்பாக நடித்து முடிப்பார்.

வாய் பேச முடியாத இவருக்கு தெலுங்கானா மாநில அரசு ஒரு பொறுப்பை கொடுத்துள்ளது, மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை எடுத்த நிலையில் அதற்கான விளம்பர தூதராக அபிநயா நியமிக்கப்பட்டார்.

ஆனால் அபிநயா இதற்காக சம்பளம் எதுவும் வாங்கவில்லை அவர்களுக்கு வாக்களிப்பதன் அவசியத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.

abiyana

இந்த நிலையில் இவர் தற்பொழுது மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரல் ஆகியது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நாடோடிகள் 2 திரைப்படம் வெளியானது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

abiyana
abiyana
abiyana

Leave a Comment

Exit mobile version