சர்வம் திரைப்படத்தில் ஆர்யாவுக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.? அட இந்த முன்னணி ஹீரோவா என ரசிகர்கள் ஷாக்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா, இவர் எந்த ஒரு கதாப்பாத்திரமாக இருந்தாலும் தனது அசால்டான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்றவர்.

நடிகர் ஆர்யா இளம் நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார், இவர்கள் இருவரும் கஜினிகாந்த் திரைப்படத்தில் இணைந்து நடித்தபோது காதலித்தார்கள் அதன்பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.

முன்னணி நடிகராக வலம் வந்தாலும் நீண்டகாலமாக வெற்றி திரைப்படத்தை கொடுக்க முடியாமல் தடுமாறி வருகிறார் ஆர்யா, ஆர்யா இதற்கு முன் பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்துள்ளார் அதேபோல் சில தோல்வி திரைப்படங்களையும்  கொடுத்துள்ளார் அந்த லிஸ்டில் சர்வம் திரைப்படமும் ஒன்று.

சர்வம் திரைப்படத்தை விஷ்ணுவரதன் தான் இயக்கியிருந்தார் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் இந்த திரைப்படத்தில் உள்ள பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாக வைரலானது, என்னதான் பாடல் ஹிட் அடித்தாலும் படம் சொதப்பல் தான், இந்த நிலையில் முதலில் சர்வம் திரைப்படத்தில் நடிக்க இருந்தது நடிகர் சூர்யா தான் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.

அதேபோல் சூர்யாவுக்கு ஜோடியாக இலியானாவை நடிக்க வைக்க முடிவு செய்திருந்தார்கள், ஆனால் அவர் சில காரணங்களால் சூர்யா நடிக்க முடியாமல் போனது அதன் பிறகுதான் ஆர்யா நடித்தார்.

ஒருவேளை சர்வம் திரைப்படத்தில் சூர்யா நடித்து இருந்தால் ஹிட் அடித்திருக்கும் என விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

suriya-latest

Leave a Comment

Exit mobile version