சம்பாதிச்ச ஒட்டு மொத்தத்தையும் தானம் செய்து விட்டார்.! இன்னும் நாங்கள் வாடகை வீட்டில்தான்.! சார்பட்டா மாறனின் மனைவி கண்ணீர் பேட்டி.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பா ரஞ்சித் இவர் மிகக்குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தைப் பெற்று விட்டார் இவர் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் சமீபத்தில் உருவாக்கிய திரைப்படம்தான் சார்பட்டா பரம்பரை. இந்த திரைப்படம் கடந்த 22ஆம் தேதி அமேசான் ப்ரைம்  ott இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இந்த திரைப்படத்தில் ஆர்யாவுடன் இணைந்து துஷாரா விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சன நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், சபீர், மாறன் என பலரும் நடித்து இருந்தார்கள். சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த திரைப்படம் வெளியாகி  ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆங்கில குத்து சண்டை விளையாட்டை மையமாக வைத்து இந்த திரைப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் ஆர்யாவின் கதாபாத்திரத்தை தவிர்த்து பலரும் தங்களது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்கள். ஆர்யா இவர்களைத் தாண்டி ஒரு படி மேலே சென்று தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தினார். வாத்தியாராக வந்த பசுபதி ரியல் வாத்தியாராக தனது நடிப்பை வெளிப்படுத்தினார்.

அதேபோல் சபீர் டான்சிங் ரோஸ் ஆக தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி நடித்திருந்தார் அதேபோல் இந்த திரைப்படத்தில் மாஞ்சா கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் மாறன் இவருக்கு இந்த திரைப்படம் தான் கடைசி திரைப்படமாக அமைந்தது ஆனால் இந்த திரைப்படத்தை காண அவர்  இல்லை. மாறன் இதற்கு முன்பு டிஷ்யூம், பட்டாசு, தலைநகரம், வேட்டைக்காரன் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார் இப்படி ஒரு நிலையில் கடந்த மாதம் கொரோனா தொற்று காரணமாக காலமானார்.

சார்பட்டா படத்தில் இவரின் காட்சியை பார்க்கும் பொழுது பலருக்கும் இறக்கம்தான் வந்திருக்கும் ஏனென்றால் இந்தத் திரைப்படத்தில் அவர் நடித்ததை காண இன்று அவர் இல்லை இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் பங்கேற்ற மாறனின் மனைவி அவர் தனக்கு எதுவும் சேர்த்து வைக்கவில்லை எல்லாம் தானம் செய்து விட்டார் இப்போதும் நாங்கள் வாடகை வீட்டில் தான் இருக்கோம் இந்த படத்திற்காக ரொம்ப ஆசைப்பட்டார் ஆனால் பலன் கிடைக்கும் போது அதை பார்க்க வரவில்லை எனக்கூறி வருத்தத்துடன் பேசினார்.

Leave a Comment