இதுபோல் ஆளுக்கு ஏன் வாய்ப்பு கொடுத்தீர்கள்.! ஜான் விஜயால் சிக்கலில் மாட்டிக் கொண்ட இயக்குனர் ரஞ்சித் என்ன காரணம் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் ரஞ்சித் ஒரு சிறந்த இயக்குனர். அவர் இயக்கும் திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனம் மற்றும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் ஆர்யா நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படம்தான் சார்பட்டா பரம்பரை இந்த திரைப்படத்தில் ஆர்யாவுடன் இணைந்து துஷாரா விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சன நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லாராக்கால், மாறன் என பலர் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தில் ஆர்யா மட்டுமல்லாமல் பலரும் அவரவர்கள் கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார்கள் அதிலும் குறிப்பாக டான்சிங் ரோசாக வந்த நடிகர் ஷபீர் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் டாடியாக நடித்த ஜான் விஜய், ரங்கநாக நடித்த பசுபதி என அனைவரும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பக்கபலமாக இருந்தார்கள்.

இந்த நிலையில் ஜான் விஜய்க்கு இந்த திரைப்படத்தில் எப்படி வாய்ப்பு கொடுத்தார் ரஞ்சித் என இணையதள வாசிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதனால் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டு முழித்து வருகிறார் ரஞ்சித். இதற்கு காரணம் தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சனி தான், ஏனென்றால் ஜான் விஜய் மீது ஒரு காலகட்டத்தில் ஸ்ரீ ரஞ்சனி மீடூ புகார் ஒன்றை வைத்தார். அந்த பிரச்சனை தான் தற்பொழுது கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.

2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த ஸ்ரீ ரஞ்சினி ஜான் விஜய் மீது மீடூ புகார் அளித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார் இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தியில் ஒரு முறை ஜான் விஜய்யிடம் பேட்டி எடுத்தேன் அதன் பின்பு நடு இரவில் எனக்கு போன் செய்து எப்பொழுது அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என கேட்டார்.

அதற்கு நானும் இதுகுறித்து காலையில் பேசலாம் என அவரிடம் கூறினேன் ஆனால் ஜான் விஜய் என்னிடம் தவறாக பேசி பாலியல் உரையாடலுக்கு வற்புறுத்தினார் நான் அவரை எச்சரித்த பின்னர் அவர் பேச்சை மாற்றிக் கொண்டார் அவர் பல பெண்களிடம் தப்பாக நடந்துள்ளார் காலா டப்பிடிப்பின்போது கூட அவரிடம் செல்பி எடுக்க வந்த பெண்களிடம் முத்தம் கொடுக்க சொல்லி புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஜான் விஜய் மிகவும் மோசமானவர் இந்த பிரச்சனை முடிந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் ரஞ்சித் எப்படி அவருக்கு சார்பட்டா பரம்பரை படத்தில் வாய்ப்பு கொடுத்தார்  என டுவிட்டரில் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment