“அண்ணாத்த” படப்பிடிப்பில் இருந்த ரஜினியை பார்க்க ஓடோடி வந்த சரவணன் அருள்.! இணையதளத்தில் பட்டையை கிளப்பும் வைரல் புகைப்படம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்பு சில பிரச்சனைகள் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள கோகுலம்  ஸ்டூடியோவில் ஆரம்பிக்கப்பட்டது இதில் ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி போன்ற பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

நயன்தாரா மற்றும் ரஜினி ஆகியோர் இடம்பெற்றிருக்கும் காட்சிகள் எடுக்கப்பட்டு தற்போது வருகின்றன.

இதே கோகுலம் ஸ்டூடியோவில் சரவணா ஸ்டோர் சரவணன் அருள் பெயர் வைக்கப்படாத 200 கோடி பட்ஜெட் படத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தை ஜேடி ஜெர்ரி என இருவர் இணைந்து இந்த திரைப்படத்தை இயக்கி வருகின்றனர் இப்படத்தின் சண்டைக் காட்சிகள் முடிவடைந்த நிலையில் தற்போது ஹீரோ, ஹீரோயின் இணைந்து நடிக்கும் பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சரவணன் அருள் அண்ணாத்த படப்பிடிப்பு தளத்திற்கு சென்று ரஜினியை நேரில்  பார்த்தார்.

இருவரும் நேரில் சந்தித்து கொண்டு நலம் விசாரித்ததோடு, படத்தைப் பற்றியும் பேசிக்கொண்டனர்.

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இணையதள பக்கத்தில் ஷேர் செய்து வருகின்றனர் இது நீங்களே பாருங்கள்.

Leave a Comment