மோசடியில் சிக்கிய சரத்குமார் மற்றும் ராதிகா.! நீங்களா இப்படி அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

பிரபல முன்னணி ஜோடிகளாக தமிழ் சினிமாவில் வலம் வருபவர்கள் சரத்குமார் மற்றும் ராதிகா.சரத்குமார் ஆரம்ப காலகட்டத்தில் நடித்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவும் நன்கு வசூல் அளித்திருக்கும்.

அதிலிருந்து சரத்குமார் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை வாக்கியது மட்டுமல்லாமல் இவர் கதாநாயகனாக நடித்த சூரிய வம்சம்,ஐயா,சென்னையில் ஒரு நாள்,நாட்டாமை போன்ற பல திரைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

ஒரு காலகட்டத்தில் சரத்குமாருக்கு சரியான பட வாய்ப்பு எதுவும் இல்லாததால் குணச்சித்திர வேடங்களான அப்பா மற்றும் வில்லன் போன்ற முக்கியமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

மேலும் ராதிகாவும் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார் இவர் வெள்ளித்திரையில் நடிப்பது மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடத்தை பிடித்து விட்டார்.

அவ்வாறு சின்னத்திரையில் ராதிகா நடித்த சித்தி 2,சித்தி போன்ற சீரியல்கள் சின்னத்திரை மக்களை அதிகம் கவர்ந்து விட்டது.

இந்நிலையில் சரத்குமார் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் சேர்ந்து செக் மோசடி செய்ததாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து தற்போது நீதிமன்றம் அவர்களுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து உள்ளதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது.

sarathkumar

அதில் ரேடியன்ஸ் என்ற நிறுவனம் தொடர்ந்த வழக்கில் குற்றம் இவர்கள் மீது நிரூபிக்கப்பட்டதால் இவர்கள் இரண்டு பேருக்கும் ஒரு ஆண்டுகாலம் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது மேலும் சரத்குமார் தற்போது சமத்துவக் கட்சியின் மூலம் அரசியலுக்கு ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையே இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருவதை அடுத்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்து வருகிறார்கள் என்றுதான் கூறவேண்டும்.

Leave a Comment

Exit mobile version