பெரிய ஹீரோ என்ற இமேஜை எந்தொரு இடத்திலும் காட்டாமல் மிக எளிமையாக பழகக்கூடியவர் இவர் தான் – சரண்யா பொன்வண்ணன் பேட்டி.!

நடிகை சரண்யா பொன்வன்னன் மணிரத்தினம் இயக்கிய நாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார் அதன் பிறகு இவர் ஹீரோயினாவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து பேரையும் புகழையும் சம்பாதித்தார் பிறகு வாய்ப்புகள் ஏராளமாக குவிந்தன ..

குறிப்பாக இவர் நடித்த ராம், தவமாய் தவமிருந்து, முத்துக்கு முத்தாக, களவாணி, எம் மகன், வேல், ஒரு கல் ஒரு கண்ணாடி என சொல்லிக் கொண்டே போகலாம் தொடர்ந்து வெற்றியை ருசித்து இப்படி ஓடிக்கொண்டிருக்கும் இவருக்கு இப்பொழுதும் டாப் ஹீரோவின் படங்களில் அம்மா சித்தி போன்ற கதாபாத்திரங்களில் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார்.

இதனால் அவரது மார்க்கெட்டும் குறையாமல் இருக்கிறது இப்படி ஓடிக் கொண்டிருக்கும் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் குறித்து பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது.. முதல்முறையாக அஜித்துடன் இணைந்து கிரீடம் திரைப்படத்தில் நடிக்கும் போது எனக்கு பயமாக இருந்தது.. ஏனென்றால் ஆள் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார்.

அதனால் கெத்து காட்டுவார் அவர் வைப்பது தான் சட்டம் என நினைத்தேன் ஆனால் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற பிறகு தான் தெரிகிறது. அஜித் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் பழகக்கூடியவர் குழந்தை மாதிரி என்று அப்பொழுதுதான் புரிந்தது. நம்ம ஊரில் ஒரு வெள்ளைக்கார நடிகன் என்றால் அது அஜித் தான்..

ஒரு காட்சியில் அஜித் பேச வேண்டிய வசனங்கள் மற்றவர்கள் பேசினால் சிறப்பாக இருக்கும் என அவர் நினைத்து விட்டால் உடனே கொடுத்து அழகு பார்க்கக் கூடியவர் மற்ற நடிகர்கள் இதுபோல் செய்ய மாட்டார்கள் தன் படங்களில் தான்தான் ஸ்கோர் செய்ய வேண்டும் என நினைப்பார்கள் ஆனால் அஜித் இதிலிருந்து முற்றிலும் மாறு போட்டவர் அந்த விஷயத்தைப் பொறுத்தவரை அஜித்தை நான் ரசித்துப் பார்ப்பேன். அவர் ஒரு தலை சிறந்த மனிதர் என கூறினார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment