சரண்யா என்ற கிளியை கட்டிபோட காத்திருக்கும் காதலன் இவர் தான்.! விரைவில் டும் டும் டும்.

தற்போது சின்னத்திரையில் சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் சரண்யா சுந்தர்ராஜ்  ஆவார். இவர் தமிழ் செய்தி வாசிப்பாளர், மாதிரி நடிகை மற்றும்  நிகழ்ச்சி  தொகுப்பாளராக தன் சினிமா பயணத்தை தொடங்கினார். இதன் பிறகுதான் விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியல்  மூலம்  சின்னத்திரையில் பரபலமடைந்தார்.

தற்பொழுது இவர் ஆயுத எழுத்து என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவர் வெள்ளித்திரையில் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது, என்4 போன்ற தமிழ் திரைப்படங்களில்  சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ராஜ் டிவி, ஜீ தமிழ், புதிய தலைமுறை, விஜய் டிவி உட்பட இன்னும் பல தொலைக்காட்சிகளில் பணியாற்றி இருக்கிறார்.

இவர் தற்பொழுது ஒரு பேட்டியில் தன் காதலரை பற்றி கூறியிருந்தார். நான் எப்படி தமிழில் ஆர்வம் காட்டிகிறேனோ அதே போல அவரும் ஆங்கிலத்தில் ஆர்வம் உடையவர் என அவருடைய காதலரை புகழ்ந்துள்ளார். என் திருமணத்தை பற்றி என் பெற்றோருடன் சொல்லி இருக்கிறேன் என்றும் இன்னும் ஒரு வருடத்தில் எனக்கு கல்யாணம் எனவும் கூறியுள்ளார்.

தற்பொழுது தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். இப்புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது அதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

sharanyaturadi-tamil 360
sharanya turadi-tamil 360

Leave a Comment