சாந்தனு தவறவிட்ட 5 மெகா ஹிட் திரைப்படங்கள்.! அட இந்த படமும் சாந்தனு நடிக்க வேண்டியதா

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வந்து சாந்தனர் இவர் தமிழில் பல திரைப்படங்கள் நடித்திருந்தாலும் சினிமாவில் விஜய் அஜித் பிடித்த அந்தஸ்தை பிடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். மேலும் நடிகர் சாந்தனு பல தோல்வி படங்களை கொடுத்து வந்ததால் தனது மார்க்கேட்டை இழந்த இவர் அதே சமயம் பல ஹிட் படங்களை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு. அந்த படங்களில் இவர் நடித்திருந்தால் தற்போது   இழந்த மார்க்கெட்டை பிடித்திருக்கலாம் என்று கூறி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சாந்தனு தவற  விட்ட ஐந்து மெகா ஹிட் திரைப்படங்களை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

காதல்:- நடிகர் பரத் நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் தான் காதல் இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது சாம்பல்தான் ஆனால் அவருக்கு இந்த கதை பிடிக்காததால் இந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

சுப்பிரமணியபுரம் :- சசிகுமார் அவர்கள் இயக்கிய முதல் திரைப்படம் தான் சுப்பிரமணியபுரம். இரண்டாவது ஹீரோவாக நடித்தவர் தான் நடிகர் ஜெய். இந்த படத்தின் மூலம்தான் நடிகர் ஜெய் ஹிந்த் சினிமாவில் அறிமுகமானார் ஆனால் நடிகர் ஜெய்க்கு முன்பாக இந்த கதாபாத்திரத்தில் சாந்தனு அவர்கள் தான் நடிக்க இருந்தாராம் ஆனால் ஒரு சில காரணத்தால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாக அவரே கூறியுள்ளார்.

களவாணி:- நடிகர் விமல் அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஹிட்டான திரைப்படம் என்றால் அது களவாணி திரைப்படம் தான். ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் சாந்தனுதானாம். இந்த படத்தில் அவர் நடிக்காமல் போனதற்கு காரணம் என்னவென்று இதுவரைக்கும்  வெளிப்படுத்தவில்லை.

சைக்கோ:- மிஷ்கின் அவர்கள் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சைக்கோ இந்த திரைப்படத்தில் பார்வைத் திறன் இழந்த கதாநாயகனாக நடித்திருப்பார் நடிகர் உதயநிதி ஸ்டாலின். இந்த படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பதற்கு முன்பாக சாந்தன் அவர்கள் தான் நடிக்க இருந்தாராம் ஆனால் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் மாறிவிட்டதால் அவருக்கு இந்த படம் கையை விட்டு போகியது.

டானாகாரன் :- இந்தத் திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி மிகவும் மாபெரும் வெற்றி பெற்றது இந்த திரைப்படத்தை ஜெய் பீம் பட தமிழரசன் அவர்கள் தான் இயக்கியுள்ளார் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் தான் இவர் முதன்முதலாக இயக்கிய திரைப்படம். திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபு அவர்கள் நடித்திருப்பார். ஆனால் இந்த திரைப்படத்தின் கதையை முதலில் தமிழரசன்  சாந்தனு இடம்தான் கூறியுள்ளாராம். மேலும் இந்த திரைப்படத்தில் சாந்தனு நடிக்க முடியாமல் போனதற்கு காரணமும் கூறவில்லை.

இந்த ஐந்து படங்களிலும் நடிகர் சாந்தனு நடித்திருந்தால் தமிழில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்திருப்பார். தற்போது நல்ல கதையை விட்டு விட்டு படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத கதைகளை தேர்ந்தெடுத்த நடுத்தெருகிறார்.

Leave a Comment