உட்ற நண்பர் மற்றும் நண்பரின் தந்தை இழந்த சந்தானம் அதிலிருந்து மீளமுடியாததால் தற்பொழுது எப்படியுள்ளார் தெரியுமா.?

வடிவேலு, கவுண்டமணி,  செந்தில், நாகேஷ் போன்ற நகைச்சுவை நடிகர்களுக்கு பின்பு சந்தானம் தான்  நகைச்சுவை நடிகராக திரையுலகில் கலக்கி வந்தார். இந்த நிலையில் காமெடி என்றாலே சந்தானம் தான் இவருக்கு ஈடாக எவராலும் காமெடி செய்ய முடியாது என்ற நிலையில் தன்னுடைய நடிப்புத் திறமையினால் மக்கள் மனதில்  தீரா இடம்பிடித்துள்ளார்.

தற்போது இவர் ஹீரோவாக நடித்து வருகிறார் எனவே தற்போது சினிமாவில் நல்ல காமெடி நடிகர் அமையவில்லை என்பது வருத்தமாக உள்ளது. ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த முதல் படம்  வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் இப்படம் இவருக்கு வெற்றியைத் தரவில்லை என்றாலும் சந்தானம் நம்பிக்கையை விடாமல் இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, அக்யூஸ்ட் நம்பர் 1,  சக்க போடு போடு ராஜா, உட்பட இன்னும் பல படங்களில் நடித்துள்ளார்.

சந்தானம் முதலில் விஜய் தொலைக்காட்சியில் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2004ஆம் ஆண்டில் திரையுலகிற்கு அறிமுகமான திரைப்படம் மன்மதன் இத்திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக சினிமா வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தார். இதனை தொடர்ந்து பல வெற்றிப் படங்களை நடித்து உள்ளார்.

இந்த நிலையில் தற்போது சந்தானத்தின் நண்பரின் தந்தை இறந்துவிட்டார் என நண்பருக்கு ஆறுதல் சொல்வதற்காக அவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது அவரைப் பார்த்த ரசிகர்கள் இவருக்கு உடல்நிலை சரியில்லை என கூறி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளனர். இந்த புகைப்படம் இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது சந்தானத்தின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

sandhanam-recent-photo
sandhanam-recent-photo

 

Leave a Comment