‘AK62’பட கதை இதுதான்.. விக்னேஷ் சிவன் குறித்து உண்மையை உடைத்த சந்தானம்

Santhanam; விக்னேஷ் சிவன் அஜித் நடிப்பில் உருவாக இருந்த படம் குறித்து நடிகர் சந்தானம் அளித்திருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் தான் நடிகர் சந்தானம். நகைச்சுவை நடிகராக இருந்து வந்த இவர் சமீப காலங்களாக முன்னணி நடிகராக திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் வின் டிவி எனும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் டீ கடை பெஞ்ச் என்ற நிகழ்ச்சியின் மூலம் மீடியாவிற்கு அறிமுகமான நிலையில் இதனை அடுத்து விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பிரபலத்தை பெற்று தந்தது. இதனை அடுத்து தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

அப்படி ஆரம்பத்தில் குணால் நடித்த பேசாத கண்ணும் பேசும் படத்தில் சிறிய கேரக்டரில் நடிக்க இதனை அடுத்து காதல் அழிவதில்லை இது போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். இவ்வாறு சில காலங்களாக சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

அப்படி சபாபதி, டிக்கிலோனா, பாரிஸ் ஜெயராஜ், பிஸ்கோத் போன்ற திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் சொல்லும் அளவிற்கு வெற்றியினை பெறவில்லை. இதனை அடுத்து கடந்த ஆண்டு வெளியான குளு குளு படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தினை ரத்னகுமார் இயக்கினார் இந்த படமும் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

தற்போது சந்தானம் தில்லுக்குதுட்டு பாகம் 3ல் நடித்துவரும் நிலையில் இதன் அடுத்து விக்னேஷ் சிவன் அஜித் கூட்டணியில் உருவாக இருந்த படத்தில் சந்தானம் நடிக்க இருந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, அஜித்- விக்னேஷ் சிவன் கூட்டணியில் ஏகே 62 திரைப்படம் உருவாக இருந்த நிலையில் கதை தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடிக்காத காரணத்தினால் இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த படத்தில் சந்தானம் காமெடியனாக இல்லாமல் வேறு ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் இது குறித்து சந்தானம் அளித்த பேட்டியில், விக்னேஷ் சிவனுடன் படம் பண்ணுவதாக இருந்தது உண்மைதான் படத்தின் கதை எல்லாம் பண்ணிவிட்டு அந்த படத்தில் நான் நடிப்பதை அஜித் சாரை வைத்து பண்ணலாம் என்று தான் முடிவு செய்திருந்தோம்.

அதனால் தான் நானும் ட்விட்டரில் அதை பற்றி எதையும் பேசவில்லை அதற்கு பிறகு சில காரணங்களால் அந்த படம் அப்படியே நிறுத்தப்பட்டது. இப்பொழுதும் அந்த படத்தின் கதை தயாராக தான் இருக்கிறது. அந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம், கேட்டப்ப எல்லாம் சூப்பராக இருந்தது வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பண்ணலாமென்று கூறியிருக்கிறார்.

Leave a Comment