ஹீரோ வழக்கை போதும்டா சாமி..? காமெடியனாக நடிக்க நான் ரெடி சந்தனாம் அதிரடி.!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் சந்தானம் இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். அதன் பிறகு பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வரும் நடிகர் சந்தானம் தற்போது முன்னணி நடிகர்கள் கூட நகைச்சுவை திரைப்படங்களில் நடிக்க தவிர்த்து விட்டார்.

மேலும் நடிகர் சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான குலு குலு திரைப்படம் மோசமான விமர்சனத்தை பெற்றது. இதற்கிடையில் தனது அன்பு நண்பரும் நடிகருமான ஆர்யாவிற்காக அவருடைய திரைப்படத்தில் நகைச்சுவை வேடங்களில் நடிக்க நான் தயார் என்று சந்தானம் அவர்கள் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

அதாவது ஆர்யா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் திரைப்படம் அறிவியல் சார்ந்த பேண்டஸி திரைப்படமாகும். இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 8 தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த படம் குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது.

மேலும் இந்த விளம்பர நிகழ்ச்சியில் நடிகர் சந்தானமும் ஒரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது எனக்கும் ஆர்யாவிற்கும் இடையே உள்ள நட்பை பற்றி அவர் கூறியுள்ளார். அதன் பின்னர் பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் சந்தானம் பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இயக்குனர் இயக்க முன் வந்தால் அந்தப் படத்தில் நான் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க தயார் என்றும் சந்தனம் அவர்கள் தானாகவே முன்வந்து உறுதி அளித்து உள்ளார்.

இது வரைக்கும் நடிகர் சந்தானம் அவர்கள் ஹிரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று கூறியிருந்தார் ஆனால் தர்போது கமேடியனாகவும் நடிக்க தயார் என்று கூறியது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Exit mobile version