பையனா இருந்தா மூன்று விஷயம் கண்டிப்பாக தெரியணும்.! சந்தானத்தின் புதிய வீடியோ காணொளி.!

காமெடி நடிகராக தமிழ் சினிமாவுலகில் களமிறங்கி தற்போது கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சந்தானம் இவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு மாறியவர் என்றுதான் கூறவேண்டும் இவர் சின்னத்திரையில் வின் டிவி என்னும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் டீக்கடை பெஞ்ச் என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி பின்பு விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

லொள்ளு சபா நிகழ்ச்சியில் இவர் கலந்தது மூலம் தான் இவர் தற்பொழுது உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வருகிறார் இவர் இந்த நிகழ்ச்சிக்குப் பின்பு ராதிகா இயக்கிய அண்ணாமலை என்ற தொடரிலும் நடித்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க நுழைந்தார்.

இவர் கதாநாயகனாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,தில்லுக்கு துட்டு,ஏ1 டகால்டி,பிஸ்கோத் போன்ற பல திரைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.இந்நிலையில் சந்தானம் ஒரு பேட்டியில் அவரது சிறுவயது குறித்து பேசியுள்ளார் ஆம் ஒரு தொகுப்பானி அவரது சிறுவயது புகைப்படத்தை காண்பித்து அது குறித்து கேட்டபோது சந்தானம் பதில் அளித்து வருகிறார்.

சந்தானம் எட்டாம் வகுப்பு படிக்கும் போது எடுத்த கராத்தே புகைப்படத்தை காண்பித்தார்கள் அதை பற்றி பேசிய சந்தானம் எங்க அப்பா சொல்லுவாரு ஆம்பள பையனா இருந்தா மூன்று விஷயம் தெரிஞ்சுக்கணும் முதலில் நீச்சல் அடிக்க  தெரியனும்,சைக்கிள் ஓட்ட தெரியனும்,மரம் ஏறத் தெரியனும் என சந்தானத்தின் அப்பா கூறியுள்ளாராம்.

மேலும் சந்தானம் இந்த விஷயங்களை கூறும் போது எடுத்த வீடியோ காணொளி தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Comment