பழைய குருடி கதவைத் திறடி என்ற பழமொழிக்கு ஏற்ப தனது சூப்பர் ஹிட் திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்க முடிவு செய்த சந்தானம்.? ஆத்தாடி இந்த படமா என அலறும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் புகழ்பெற்று விளங்கிவரும் பல முன்னணி நடிகர்களுக்கு துணை கதாபாத்திரத்தில் நடித்து அதன் பிறகு கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த நடிகர்களில் ஒருவர் தான் சந்தானம் இவர் பல திரைப்படங்களில் காமெடி நடிகனாக நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு மாறிய புதியதில்  மட்டுமே காமெடி நடிகனாக பல திரைப்படங்களில் நடித்தார்.அதனை தொடர்ந்து பார்த்தால் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தை கையில் எடுத்தார் அதில் கதாநாயகனாக நடித்த இவருக்கு மக்கள் நல்ல வரவேற்பை தந்ததால் தொடர்ச்சியாக தற்பொழுது கதாநாயகன் கதாபாத்திரத்திலேயே நடித்து வருகிறார்.

அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தது ஆனால் சமீப காலமாக இவரது நடிப்பில் வெளிவரும் படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைப்பதில்லை.

இதனால் சந்தானம் பீல்ட் அவுட் ஆகிவிடக் கூடாது என்று தனது ஹிட் திரைப்படத்தின் மூன்றாவது பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது தில்லுக்கு துட்டு திரைப்படத்தின் முதல் பாகம் மக்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றது அதனை தொடர்ந்து இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது.

இந்த இரண்டு பாகங்களும் நல்ல வரவேற்பு பெற்றதால் தற்பொழுது சந்தானம் தில்லுக்கு துட்டு மூன்றாம் பாகத்தை எப்படியாவது எடுத்து நடிக்க வேண்டும் என பிளான் செய்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த மூன்றாம் பாகத்தில் பல சினிமா பிரபலங்களையும் நடிக்க வைக்க போகிறாராம் படத்தை எப்படியாவது எடுத்து ஹிட் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சந்தானம் முடிவெடுத்துள்ளதாக இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

santhanam

இதனை அறிந்த ஒரு சில ரசிகர்கள் இந்த மூன்றாம் பாகம் கண்டிப்பாக நடிகர் சந்தானம் அவர்களுக்கு நல்ல வரவேற்பை கொடுக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை ஏனென்றால் இவர் நடித்த இரண்டு பாகங்களும் சூப்பர் ஹிட் ஆகிவிட்டது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version