மீரா மிதுன் கைது குறித்து தனது புதிய பதிவை போட்ட சனம் செட்டி.! தீயாய் பரவும் செய்தி.

சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் ஓடிக்கொண்டிருந்த மீரா மிதுனுக்கு ஒரு கட்டத்தில் சுத்தமாக வாய்ப்புகள் கிடைக்காததால் டாப் நடிகர் நடிகைகளை வம்புக்கு இழுத்து குற்றம்சாட்டினார்.

இதை அறிந்த நடிகர் நடிகைகளின் ரசிகர்கள் மீரா மிதுனை  வம்புக்கு இழுத்தனர் அவரும் ரசிகர்களையும் நடிகர்களையும் கடுமையாக திட்டி தீர்த்தார் இப்படி பல்வேறு செயல்களில் திட்டி தீர்த்து கொண்டிருந்த மீரா சமீபத்தில் ஜாதியை இழுத்து பலரையும் விமர்சித்தார்.

இதற்கு பிறகு இவரை விட்டு விட்டால் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் சென்று விடுவார் என்பதை உணர்ந்து போலீசார் அவரை கேரளாவில் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். தற்போது இவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அவரை தொடர்ந்து அவருடன் இருந்த நண்பரையும் கைது செய்துள்ளது போலீஸ்.

இந்த நிலையில் பிரபல நடிகையும், மாடல் அழகியுமான சனம் ஷெட்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் மீரா மிதுன் கைது குறித்து புதிய பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அவர் கூறியுள்ளது : தமிழக போலீசாருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் சில ஆண்டுகளுக்கு முன்பு கேட்டுக் கொண்டிருந்த சகிக்க முடியாத பேச்சுகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்து உள்ளீர்கள் என கூறினார் நடிகை சனம் செட்டி.

இவ்வாறு தெரிவித்தது தற்போது ரசிகர்களை சந்தோஷம் அடைய வைத்துள்ளது. சினிமாவையும் தாண்டி நிஜத்திலும் நல்ல விஷயங்களுக்கு பாராட்டு தெரிவிப்பதில் சனம் செட்டி நிகர் வேறு யாருமில்லை என கூறிய அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Comment