செய்த தொழிலுக்கு துரோகம் செய்த சமுத்திரகனி..! இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ..?

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனராக வலம் வந்தவர் தான் இயக்குனர் சமுத்திரகனி இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் தற்பொழுது முழு நேர நடிகனாக மாறியது பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது அந்த வகையில் இவர் சுப்பிரமணியபுரம் ஈசன் போன்ற பல்வேறு திரைப்படங்களை இயக்கியும் நடித்தும் உள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

மேலும் சமீபத்தில் நமது நடிகர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார் அது மட்டும் இல்லாமல் இவருக்கு பெரிய பெரிய இயக்குனர்களிடம் இருந்தும் அழைப்பு வந்த வண்ணம் இருப்பதன் காரணமாக பிசியாக இருப்பது மட்டுமில்லாமல் சமீபத்தில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் என்ற திரைப்படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சமுத்திரகனி சமீபத்தில் அஜித்தின் துணிவு திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அவருடைய கால் சீட்டுக்காக பல்வேறு தயாரிப்பாளர்களும் காத்துக் கொண்டு இருக்கிறார்களாம்.

அந்த வகையில் பெரிய பட்ஜெட் திரைப்படம் அல்லது பான் இந்தியா திரைப்படம் போன்ற திரைப்படங்களாக இருந்தால் அதற்கு சமுத்திரகனியை கூப்பிட்டு ஒரு சிறு கதாபாத்திரமாவது கொடுத்து விடுகிறார்களாம் இதன் காரணமாக பாலிவுட் இயக்குனர்களும் சமுத்திரகனி பக்கம் திரும்பி உள்ளார்கள்.

இதனை தொடர்ந்து பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க இவருக்கு பெரிய இயக்குனர்களிடம் இருந்து அழைப்பு வந்து கொண்டிருக்கிறது மேலும் இவரிடம் கதை சொல்வதற்காக பல்வேறு இயக்குனர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என தெரிய வருகிறது ஆகையால் விரைவில் இவரை பாலிவுட் திரைப்படங்களில் பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு இவருடைய செய்திகளை பார்க்கும் பொழுது இவர் இயக்குனர் என்பதை மறந்துவிட்டார். போல என பலரும் கூறி வருகிறார்கள்.

Leave a Comment