இரண்டு குழந்தை பிறந்த பிறகு நீச்சல் உடையில் போஸ் கொடுத்த சமீரா ரெட்டி.! இப்படி ஒரு போஸ் தேவையா என அறிவுரை கூறும் ரசிகர்கள்.!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமீரா ரெட்டி இவர் 2002ஆம் ஆண்டு ‘மெய்னே தில் தூஜக்கோ தியா’ என்ற ஹிந்தி திரைப்படத்தில் முதன்முதலாக நடிக்க ஆரம்பித்தார் அதன்பிறகு ஹிந்தியும் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

அதுமட்டுமில்லாமல் தெலுங்கு, பெங்காலி, தமிழ் மலையாளம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் முதன்முதலாக சூர்யா நடிப்பில் வெளியாகிய வாரணம் ஆயிரம் என்ற திரைப்படத்தில் மேக்னா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.

இவரின் கதாபாத்திரம் வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது அதனால் தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்த்தார்கள், இந்த நிலையில் அஜித்தின் அசல் திரைப்படத்திலும் நடித்திரந்தார்.

அதுமட்டுமில்லாமல் வெடி, வேட்டை, நடுநிசி நாய்கள் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் பின்பு இவருக்கு தமிழில் சரியான பட வாய்ப்பு அமையாததால் மீண்டும் ஹந்தி மற்றும் தெலுங்கு சினிமா பக்கம் திரும்பினார்.

நடிகை சமீரா ரெட்டிக்கு மேக்னா ரெட்டி, சுஸ்மா ரேட்டி என இரண்டு சகோதரிகள் இருக்கிறார்கள். ஒரு காலகட்டத்தில் சரியான பட வாய்ப்பு அமையாததால் அக்ஷய் வரத் என்பவரை திருமணம் செய்து கொண்டார் தற்போது இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் நடிகை சமீராரெட்டி சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் அடிக்கடி தன்னுடைய குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருவார் அந்த வகையில் தற்பொழுது குழந்தையுடன் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் சமீரா ரெட்டிக்கு இவ்வளவு அழகான குழந்தை என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

sameera reddy
sameera reddy
sameera reddy
sameera reddy

Leave a Comment