சமந்தாவுக்கு இன்று திருமண நாள் : இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம்.! பார்த்து சோகமான ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பின் தென்னிந்திய திரை உலகம் முழுவதும் பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தவர் நடிகை சமந்தா. அதன் விளைவாக இவர் தென்னிந்திய உலகம் முழுவதும் வாய்ப்புகள் குவிந்தன. அதிலும் குறிப்பாக தெலுங்கில் ஏராளம்.

தெலுங்கில் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும்போது நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா மீது காதல் ஏற்பட்டு அது கல்யாணத்தில் முடிந்தது நான்கு வருடம் சிறப்பாக வாழ்ந்து ரசிகர்கள் மனதில் நம்பர் 1 ஜோடியாக வலம் வந்தனர். படத்தில் இருவரும் சினிமாவில் சிறப்பாக ஜோடி போட்டு நடித்து வெள்ளித்திரையிலும் நிஜ வாழ்க்கையிலும் சிறப்பாக ஓடினார்.

இப்படி இருந்த நிலையில் கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி திடீரென இருவரும் விவகரத்து பெற்று பிரிந்தனர். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது வெகுவிரைவிலேயே நான்காவது திருமணநாள் வருவதற்குள் இருவரும் பிரிந்து விட்டனர் என்பதும் அவர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியை கொடுத்தது.

நாக சைதன்யா விவாகரத்து கேட்டவுடன் சமந்தாவும் பெரிதளவில் பிரச்சனையோ அல்லது எதையும் கேட்காமல் அதில் இருந்து தற்போது விலகினார் மேலும் சமந்தாவின் அப்பாவும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சமந்தா எந்த முடிவு எடுத்தாலும் சரியாக இருக்கும் என கூறினார்

. இந்த நிலையில் நடிகை சமந்தா இன்று தனது நான்காவது திருமணநாள் ஆனால் இருவரும் ஒன்றாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சமந்தா இந்த தேதியை மறக்காமல் ஒரு புகைப்படத்தை வெளியிட ஒரு பதிவையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியது : தொலைந்த காணப்பட்ட படங்களின் பாடல்கள் பள்ளத்தாக்கில் மனசோர்வு எதிரொலி மற்றும் பழைய காதலர்கள் பாடல்கள் பழைய பங்களாக்கள் படிக்கட்டுகள் மற்றும் காற்றில் ஒலி என்று பதிவு செய்துள்ளார். சமந்தா இன்றைய திருமண நாளில் இப்பொழுது இது போன்ற ஒரு பதிவு போட்டு இருந்தாலும் கடந்த வருடம் இதே நாளில் சமந்தா நீ எனக்கானவன் நான் உனக்காக அவள் எந்த கதவு வந்தாலும் அதை நாம் ஒன்றாக இருப்போம் என கூறினார்.

samanatha
samanatha

Leave a Comment