சூர்யாவின் நடிப்பை பார்த்து பயந்து நடுங்கிய சமந்தா – பேட்டியில் அவரே சொன்ன சூப்பர் தகவல்.!

நடிகர் சூர்யா அண்மை காலமாக சமூக அக்கறை உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் குறிப்பாக ஜெய்பீம், சூரரைப்போற்று, எதற்கும் துணிந்தவன், ஆகிய படங்களில் அது பார்க்கமுடிகிறது அதனை தொடர்ந்து பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார் இந்த திரைப்படமும் மீனவர்கள் சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என தெரிய வருகிறது.

அதனை தொடர்ந்து தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறனுடன் சூர்யா கைகோர்த்து வாடிவாசல்   திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன இப்பொழுது  சூர்யா – பாலா உடன் இணைந்து முதற்கட்ட படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

இந்த படத்தின் சூட்டிங் கன்னியாகுமரி, தூத்துக்குடி அதை சுற்றி இருக்கும் பகுதிகளில் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தை இந்த ஆண்டே கொடுக்க சூர்யா அதிகம் முனைப்பு காட்டி வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபல நடிகையான சமந்தா.

சூர்யா குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார் அதில் அவர் கூறுகையில் சூர்யாவுடன் 24 என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தேன் இந்த படத்தில் சூர்யா 3 விதமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சூர்யா என்னுடன் ஒரு பாடலுக்கு காலையில் ரொமான்டிக்காக நடனம் ஆடியிருந்தார் அன்று மதியம் வில்லன் ரோலில் நடிகர் சூர்யா மிரட்டி இருந்தார் அந்த கதாபாத்திரத்தை நான் நிஜமாகவே  பார்த்து மிரண்டு போய்விட்டேன் அப்படி ஒரு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் என கூறி அசத்தினார். நடிகை சமந்தா  பேட்டியில் சொன்ன போது எடுக்கப்பட்ட  வீடியோ..

Leave a Comment

Exit mobile version