புஷ்பா 2 வில் என்னால் ஐட்டம் டான்ஸ் ஆட முடியாது என மறுத்த சமந்தா… சம்பளமே வேண்டாம் நான் கட்டம் கட்டி கலக்குறன் என முந்திக் கொள்ளும் ரஜினி பட நடிகை…

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன் இவர் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு பான் இந்திய திரைப்படமாக வெளியான திரைப்படம் தான் புஷ்பா இந்த திரைப்படத்தை இயக்குனர் சுகுமார் அவர்கள் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் அடித்த நிலையில் இந்த படத்தில் ஒரு பாடல் மட்டும் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆகி இருந்தது.

அந்த பாடல் தான் ஓ சொல்றியா பாடல் இந்த பாடலில் நடிகை சமந்தாவின் நடனத்தை பார்க்கவே ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு சென்றனர் அந்த அளவிற்கு நடிகை சமந்தா அவர்கள் இந்தப் பாடலில் நடனமாடி பிரபலமானார். இந்த நிலையில் நடிகை சமந்தா உடல்நிலை பிரச்சனையின் காரணமாக சிறிது மாதங்கள் மருதமலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி வரும் நிலையில் நடிகை சமந்தா ஓய்வில் இருந்து வருகிறார் அது மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வரும் என்பதால் இந்த படத்திலும் ஒரு ஐட்டம் பாடல் இருக்கிறது என்று கூறப்படுகிறது.

அந்த பாடலுக்கு நடிகை சமந்தாவை ஆட வைக்க பட குழு நடிகை சமந்தாவிடம் கேட்டு இருக்கிறது ஆனால் நடிகை சமந்தா அவர்கள் மறுத்திருக்கிறார் இதை கேள்விப்பட்ட பிரபல நடிகை ஒருவர் அந்தப் பாட்டுக்கு நான் நடனம் ஆடுகிறேன் என்று ஒற்றை காலில் நிற்கிறாராம்.

அதாவது ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகன் அதன் பிறகு மாஸ்டர், மாறன் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்த நிலையில் சமீப காலங்களாக இவருக்கு சரியான பட வாய்ப்பு இல்லாததால் மார்க்கெட்டை இழந்து இருக்கிறார்.

இந்த நிலையில் பான் இந்திய திரைப்படமாக உருவாகி வரும் புஷ்பா 2 வில் நடனமாடினால் நாம் பிரபலமாகி விடலாம் என்று எண்ணி சம்பளமே வாங்காமல் புஷ்பா 2வில் இடம் பெற்று இருக்கும் ஐட்டம் பாடலுக்கு நடனமாட ரெடி என்று கூறி இருக்கிறாராம். அது மட்டுமல்லாமல் கவர்ச்சியிலும் தாராளம் காட்ட ரெடி என்றும் கூறியிருக்கிறார் நடிகை மாளவிகா மோகன்.

இருந்தாலும் நடிகை மாளவிகாவுக்கு மார்க்கெட் இல்லை என்று படு குழுவினர் பயப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் சம்பளமே இல்லாமல் நான் அந்த பாடலுக்கு நடனமாடி கொடுக்கிறேன் என்று கூறியதால் படக் குழுவினர் மாளவிகாவை நடனம் ஆட வைக்க யோசித்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

Leave a Comment