தன்னுடைய முகத்தை மறைத்துக் கொண்டு சமந்தா வெளியிட்ட புகைப்படம்.! இலை மறை காயாக என்ன கூற வருகிறார் தெரிகிறதா.?

நடிகை சமந்தா தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் இவர் தமிழ், தெலுங்கு திரை உலகில் அதிக திரைப்படங்களில் நடித்து தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளார். அதேபோல் சமந்தாவர்க்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது அதை யாராலும் மறுக்க முடியாது. அதுமட்டுமில்லாமல் சமந்தா சமீப காலமாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள  திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி கண்டு வருகிறார்.

சமந்தா தமிழில் முதன்முதலாக விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து தனது சினிமா கேரியரை தொடங்கினார் அதனை தொடர்ந்து பாணா காத்தாடி, மாஸ்கோவின் காவேரி, பிருந்தாவனம், நடுநிசி நாய்கள், நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி என பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.

பின்பு ஒரு காலகட்டத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாகசாய்த்தன்யாவை காதலிக்க ஆரம்பித்தார் இவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள் பின்பு இரு வீட்டார் சம்மத்ததுடன் திருமணமும் செய்து கொண்டார்கள் இவர்கள் திருமணம் அக்டோபர் 2017 ஆம் ஆண்டு கோவாவில் நடைபெற்றது. சமந்தா கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் நாகசக்தி இந்து மதத்தை சேர்ந்தவர் அதனால் இரு மத முறைப்படியும்  திருமணம் நடைபெற்றது.

ஆனால் இவர்கள் திருமணம் நீண்ட காலம் நிலைக்கவில்லை 2021 ஆம் ஆண்டு இருவரும் மனம் ஒத்து கருத்து வேறுபாடு காரணமாக  விவாகரத்து அறிவித்தார்கள் பின்பு நகசைத்தன்யா மற்றும் சமந்தா இருவரும் தனித்தனியாக தங்களுடைய படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். மேலும் சமந்தா பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

சமந்தாவிற்கு ஒரு பிரச்சனை மட்டும் தன்னை தொடர்ந்து கொண்டே வருவதாக கூறுகிறார்கள் அதாவது சரும பிரச்சனையால் தான் அவர் தொடர்ந்து சிரமப்படுவதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் இவர் அமெரிக்கா சென்றதாக கூறப்படுகிறது அதுமட்டுமில்லாமல் அவர் சர்மா பிரச்சனைக்காக தான் சென்றுள்ளார் எனவும் தகவல் வெளியானது.

சமந்தா சிகிச்சை முடிந்த பிறகு மும்பை திரும்பி உள்ளார் எனவும் கூறப்படுகிறது இந்த நிலையில் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் அந்த புகைப்படத்தில் சமந்தா தன்னுடைய முகத்தை காட்டவில்லை ஆனால் அவரது டீ-ஷர்டில் நீங்கள் ஒருபோதும் தனியாக நடக்க மாட்டீர்கள் என்ற வசனம் மட்டும் இருக்கிறது.

திடீரென இது போல் வசனம் கொண்ட உடை அணியை என்ன காரணம் என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

samantha
samantha

Leave a Comment