ரத்த காயங்களுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த சமந்தா.. பார்த்து கண்ணீர் விடும் ரசிகர்கள்

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா முதலில் மாடலிங் துறையில் பயணித்த இவர் பின் பாணா காத்தாடி  திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் அதனை தொடர்ந்து தமிழ் திரையு உலகில் உச்ச நட்சத்திர நடிகர்களான சூர்யா, விஜய், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்ற நடிகர்களுடன் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக்கொண்டார்.

அதன் பிறகு அனைத்து மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்தன குறிப்பாக தெலுங்கில் இவர் அடுத்தடுத்த நடித்த படங்கள்  வெற்றி பெற்றது இப்படி பயணித்துக் கொண்டிருந்த இவர் திடீரென நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நான்கு வருடங்கள் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வந்த இந்த ஜோடி சில பிரச்சனையின் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பிறகு தனக்கு சினிமா தான் எல்லாம் என நினைத்த சமந்தா தொடர்ந்து சோலோ படங்களிலும் முக்கிய ஹீரோக்களின் படங்களிலும் நடித்து வந்தார். இந்த நிலையில் தான் அரிய வகை நோய் ஒன்று அவரை தாக்கியது.

இதனால் பல மாதங்கள் மருத்துவமனையிலேயே கதியேன கடந்தார் அதன் காரணமாக இவருடைய அழகு மற்றும் உடல் எடை போன்றவை குறைய தொடங்கியது. ஒரு வழியாக நோயிலிருந்து வெளிவந்த அவர் மீண்டும் தனது உடல் எடையை பழைய நிலைமைக்கு ஏற்றி தற்பொழுது வெப் சீரியஸ் மற்றும் படங்களில் நடித்து வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் இவர் வெப் சீரிஸில்  நடித்து வந்த பொழுது திடீரென காயம் ஏற்பட்டுள்ளது அதை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது எனக் கூறி கமெண்ட் அடித்து ஆறுதல் சொல்லி வருகின்றனர். இதோ சமந்தாவுக்கு கைகளில் அடிபட்டு இருக்கும் அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

samantha
samantha

Leave a Comment