கொச்சையான நெட்டிசன்களின் கேள்விக்கு தரமான பதிலடி கொடுத்த சமந்தா.! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவிடம் நெட்டிசன் ஒருவன் பச்சையாக ஒரு கேள்வியை கேட்டுள்ளார் அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் முதன்முதலாக வின்னைதாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பானாகாத்தாடி திரைப்படத்தில் பிரியா என்ற கதாபாத்திரத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.  அதனைத் தொடர்ந்து மாஸ்கோவின் காவிரி பிருந்தாவனம், நடுநிசி நாய்கள், நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் விஜயுடன் இணைந்து கத்தி, தெறி ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் சமீபகாலமாக சமந்தா சமூக வலைதளத்தில் பல ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார் இந்த நிலையில் சமந்தாவின் தனிப்பட்ட குணம் அவர் நடித்து வரும் படங்கள் குறித்து கேள்விகளை ரசிகர்கள் கேட்டார்கள். அதுமட்டுமில்லாமல் சமந்தாவின் விவாகரத்து குறித்தும் கேள்வி கேட்டார்கள் அதற்கு சமந்தா சுவாரசியமான பதிலைக் கூறி வந்தார்.

இந்த நிலையில் திடீரென நெட்டிசன் ஒருவர் நீங்கள் இதுவரை இனப்பெருக்கம் செய்திருக்கிறீர்களா. உங்களுடன் சேர்ந்து என … கொச்சையாக நெட்டிசன் ஒருவர் கேள்வி ஒன்றைக் கேட்டார் அதற்கு சமந்தா தக்க பதிலடி கொடுக்கும் விதமாக முதலில் ஒரு வாக்கியத்தில் இனப்பெருக்கம் எங்கு அதை எப்படி பயன்படுத்துவது என்பதை கூகுளில் தேடிக் கற்றுக் கொள்ளுங்கள் என தரமான பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த சமந்தாவின் பதில் பெருமளவில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

samantha
samantha

Leave a Comment