சமந்தா ஆரம்ப காலத்தில் இந்த வேலையைத் தான் செய்துவந்தார்.! அத்தகைய புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா இவர் அதர்வா நடிப்பில் வெளிவந்த பானா காத்தாடி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார். தமிழ் சினிமாவில் 2010ஆம் ஆண்டு அறிமுகமான சமந்தா அதே ஆண்டு தெலுங்கிலும் சினிமாவிலும் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் விண்ணைத்தாண்டி வருவாயா, மாஸ்கோவின் காவேரி, பிருந்தாவனம் நடுநிசி நாய்கள் நீதானே என் பொன்வசந்தம் போன்ற பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இதன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க தொடங்கினார் அந்தவகையில் விஜயுடன் கத்தி, தெறியும். விக்ரமுடன் பத்து எண்றதுக்குள்ள தனுஷுடன் தங்கமகன் போன்ற படங்களில் தனது மேலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார் அம்மணி தெலுங்கு சினிமாவிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி பிஸியாக நடித்து வருகிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சமந்தா அவர்கள் ஆரம்பத்தில் திருமண நிகழ்ச்சிகளில் வரவேற்பு கொடுக்கும் வெல்கம் கேர்ளாகத்தான் தனது பணியைத் தொடங்கினார். இதனை சமந்தா அவர்கள் பல பேட்டிகளில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அந்தவகையில் அவர் அப்பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

samantha
samantha

Leave a Comment