சமந்தா, அனுஷ்கா தான் என்னுடைய ஹீரோக்கள் – ராசிகண்ணா அதிரடி.? தீயாய் பரவும் செய்தி.

தென்னிந்திய திரை உலகில் பல்வேறு திரை படங்களில் நடித்து வரும் ராசிகண்ணா தமிழிலும் தற்போதைய சிறப்பம்சம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் அவருக்கான வளர்ச்சி தற்போது அசுர வேகத்தில் இருந்து வருகிறது.

தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருந்த நடிகை ராசி கண்ணா தமிழ் ரசிகர்களை ஏற்றவாறு தனது திறமையை கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்காட்டி நடித்து வருகிறார் தமிழில் சங்க தமிழன், அயோக்கியா போன்ற படங்களில் நடித்து இருந்த நிலையில் தற்போது தமிழில் ஓரிரு பட வாய்ப்புகளை கையில் வைத்துக்கொண்டு உள்ளதோடு மட்டுமல்லாமல் வெப் சீரிஸ்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

இப்படி வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் ராசிகண்ணா சமிபத்திய பேட்டி ஒன்றில் சினிமா எப்படி இருக்கிறது என்பதை  தெளிவாக கூறியுள்ளார். சினிமாவில் ஆணாதிக்கம் இருப்பதாக தெரிவித்துள்ளார் மேலும் அவர் கூறியது சினிமாத்துறையில் அதிகம் ஆணாதிக்கம் இருக்கிறது.

இருப்பினும் பெண்கள் தனது  திறமையை வெளிப்படுத்தி தற்பொழுது முன்னேறிக்கொண்டு இருக்கிறார்கள் அதிலும் குறிப்பாக அனுஷ்கா, சமந்தா மாதிரி திறமையான நடிகைகள் இருந்தால் மட்டுமே சினிமாவில் நிலைத்து நிற்க முடியும் என கூறியுள்ளார்.

இந்த இருவருமே மக்களின் பார்வையை மாற்றி இருக்கிறார்கள் அவர்களுக்கு முன்பு வரை இருந்த நடிகைகள் பார்க்க அழகாக இருக்க வேண்டும் பாடல் காட்சிகளில் நடனமாட வேண்டும் என்பதைப் பொறுத்து தான் நடிகைகள் உருவானார்கள் இப்பொழுது நன்றாகவே நடிக்க தெரிய வேண்டும் என்ற நிலைமை மாறி உள்ளது இவ்வாறு ராசிகண்ணா தெரிவித்தார்.

Leave a Comment