காதலன் வீட்டு முன்பு காதலி செய்த விபரீத செயல் சேலத்தில் பரபரப்பு.!

சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி அருகே உள்ள ஆனையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அனிதா இவருக்கு வயது 25, 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி பின் கருத்து வேறுபாடால் விவாகரத்து பெற்று தன்னுடைய பெற்றோருடன் அனிதா வசித்து வந்தார் இவர் கெங்கவல்லியில் உள்ள டிஎன்பிஎஸ்சி தனியார் பயிற்சி மையத்திற்கு சென்று வந்தார்.

அதே பயிற்சி மையத்தில் 27 வயதான விக்னேஷ் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது, இவர்கள் இருவரும் இரண்டு ஆண்டுகள் காதலித்து வந்துள்ளார்கள், இந்த நிலையில் தன்னுடைய பெற்றோர்கள் மூலம் அனிதாவை பெண் கேட்டு வருவதாக விக்னேஷ் கூறியுள்ளார்.

ஆனால் சில நாட்களாகவே விக்னேஷ் அனிதாவிடம் இருந்து விலக ஆரம்பித்தார் விக்னேஷ் இடம் பேசுவது அனிதாவிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது, பேசவே முடியாத நிலையில் அனிதா அவரது வீட்டிற்கே நேரடியாக சென்று விட்டார். அப்பொழுது விக்னேஷ் பற்றி அவரின் பெற்றோரிடம் கேட்ட பொழுது அவர்கள் விக்னேஷை மறைத்து வைத்துக்கொண்டு அவர் இல்லை என பொய் கூறினார்கள்.

இதனால் ஆத்திரமடைந்த அனிதா,  கடந்த 3 நாட்களுக்கு முன்பு கெங்கவல்லி காவல் நிலையத்தில் தன்னுடைய காதலனை சேர்த்து வைக்க கூறி புகார் ஒன்றை கொடுத்தார். ஆனால் போலீசார் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை அவர் நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த அனிதா செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் விக்னேஷ் வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்பொழுது திடீரென கையில் வைத்திருந்த விஷத்தை மடமடவென அருந்தினார் அருந்திய சில நிமிடங்களிலேயே மயங்கி விழுந்துள்ளார் அங்கிருந்தவர்கள் அனிதாவை மீட்டு கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள் ஆனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அதன்பிறகே கெங்கவல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான விக்னேசை தேடி வருகிறார்கள்.

Leave a Comment