சூப்பர் ஸ்டாருடன் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி.! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்..

பிரபல ஜீ தமிழில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியும் மற்ற தொலைக்காட்சிகள் போலவே பல புதுமுக நடிகைகளை அறிமுகப்படுத்தி தங்களது டிஆர்பியை எகிற வைத்து வருகிறார்கள். அந்த வகையில் ஜீ தமிழில் ஒரு சில சீரியல்கள் 1000 எபிசோடயும் தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது.

அந்த வகையில் ஆயிரம் எபிசோடுகளை தாண்டி ரசிகர்கள் போதும் இதற்கு மேல் இந்த சீரியலை ஒளிபரப்பாதிங்க என்று கதறவிட்ட சீரியல் யாரடி நீ மோகினி. இந்த சீரியல் ஒரு கருத்தை மட்டுமே வைத்து மாத்தி மாத்தி  அனைவருக்கும் போர் அடிக்கும் வகையில் ஒளி பரப்பி வருவதால் அனைவரும் இந்த சீரியலை வெறுத்து வருகிறார்கள்.

ஆனால் இந்த சீரியலின் மூலம் அறிமுகமான பல நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார்கள். அந்த வகையில் தற்பொழுது ஹீரோயின்களை விட வில்லிகளுக்கு தான் ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் யாரடி நீ மோகினி சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சைத்ரா ரெட்டி.

இவர் வில்லியாக நடித்து வந்தாலும் இவருக்கு என்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.  அதோடு இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.நடிகை சைத்ரா ரெட்டி திரைவுலகை சேர்ந்த பிரபல ஒளிப்பதிவாளரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் சைத்ரா ரெட்டி சமீபத்தில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முத்தம் கொடுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவியை சமீபத்தில்  சந்தித்துள்ளார். அவ்வப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment