நயன்தாராவை தொடர்ந்து மிரட்டும் அம்மனாக சாய்பல்லவி !! வைரலாகும் புகைப்படம்.

தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தியா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு காலடி எடுத்து வைத்தவர் தான் சாய் பல்லவி ஆனால் இந்தத் திரைப்படத்திற்கு முன்பு இவர் அறிமுகமானது மலையாளத்தில் தான் ஆம் இவர் மலையாளத்தில் பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அந்த திரைப்படம் ரசிகர்களிடையே வெற்றி கண்டதால் அதனைத் தொடர்ந்து தமிழில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

தியா திரைப்படத்தைத் தொடர்ந்து தமிழில் சாய்பல்லவி கதாநாயகியாக தஷுசுடன் மாரி 2 என்ற திரைப்படத்தில் அட்டகாசமாக நடித்திருப்பார் அதிலும் குறிப்பாக இவர் நடனமாடிய கோலி சோடாவே பாடல் யூ டியூபில்  அதிகப் பார்வையாளர்களைப் பார்க்க வைத்து சாதனை படைத்தது.

அதனைத் தொடர்ந்து சாய்பல்லவி சூர்யாவுடன் என்ஜிகே திரைப்படத்தில் நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது இவ்வாறு பிரபலமான நடிகையாக வலம்வரும் சாய்பல்லவி தற்போது தெலுங்கு திரையுலகில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் இவர் ஷயம் சிங்கராய் என்ற திரைப்படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் இதில் சாய்பல்லவி நடிப்பு எப்படி இருப்பதை பார்க்க ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் கூறவேண்டும்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது ஆம் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரசிகர்கள் சாய்பல்லவியை இப்படி ஒரு வேடத்தில் பார்த்திருக்கவே முடியாது என்றுதான் கூறவேண்டும்.

sai pallavi
sai pallavi

சாய்பல்லவி இந்த திரைப்படத்தில் வேற லெவலில் தான் நடித்திருப்பார் என ரசிகர்கள் பலரும் கூறி வந்த நிலையில் பலரும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமூக வலைதள பக்கங்களில் வைரலாக்கி வருகிறார்கள் சாய்பல்லவி இதில் என்ன தோற்றத்தில் நடித்திருப்பார் என பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

Leave a Comment