ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்.. விஜய் டிவி அதிரடி முடிவு..

Vijay Tv: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு நல்ல வரவேற்பு வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தொடர்ந்து புதிய சீரியல்களும் அறிமுகமாகி வருகிறது. அப்படி இந்த சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க மற்ற சேனல்களுக்கு டஃப் கொடுத்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் தற்பொழுது டிஆர்பி-யில் சன் டிவியின் சீரியலுக்கு டப் கொடுத்து வரும் தொடர் தான் சிறகடிக்க ஆசை. சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்த சீரியல் சுவாரஸ்யமான கதை அம்சத்துடன் ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. முக்கியமாக முத்து-மீனாவின் காதல், ரொமான்ஸ் போன்றவை ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்துள்ளது.

இந்த சூழலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மருமகளாக நடித்து வந்த நடிகை புதிய சீரியல் ஒன்றில் ஹீரோயினாக களம் இறங்குகிறார். எனவே இந்த சீரியலை மறைந்த இயக்குனர் தாய் செல்வம் தயாரிப்பு நிறுவனம் ‘தாய் கிரியேஷன்ஸ்’ நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது.

அப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கேரக்டரில் முன்பு நடித்து வந்த சாய் காயத்ரி தான் தற்பொழுது ஹீரோயினாக இந்த புதிய சீரியலில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இவருக்கு ஜோடியாக ஷங்கரேஷ் கதாநாயகனாக நடிக்க இந்த சீரியலுக்கு ‘நீ தான் காதல்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் சீரியலின் டப் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நீ தான் காதல் சீரியல் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில்  சிறகடிக்க ஆசை சீரியலுக்கு டஃப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலை சீரியல் கிளைமாக்ஸ் நெருங்கி இருக்கும் நிலையில் இந்த சீரியலின் முடிந்தவுடன் நீ தான் காதல் என்ற புது சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.

Exit mobile version