மர்மமான முறையில் மரணமடைந்த மலையாள நடிகையான சஹானா.! அதிர்ந்துபோன கேரள சினிமா.

கேரளா சினிமாவின் நடிகையான  சஹானா மர்மமான முறையில் இறந்து கிடந்தது மலையாள சினிமாவிற்கு ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இவருக்கு 20 வயது தான் ஆகிறது. இவர் ஒரு நடிகை மட்டுமல்லாமல் மாடல் அழகியும் ஆவார்.

இவர் மலையாள சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் அதுமட்டுமல்லாமல் இவர் மாடல் பணியும் செய்து வந்தார். இதனிடையே இவர் சாஜத் என்பவரை  காதலித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் ஆனது.

முதலில் சஹானாவின் குடும்பத்தினர் இந்த திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தனர் பின்னர் சகானா தன்னுடைய பெற்றோர்களை சம்மதிக்க வைத்து  சஜாத்தை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு சஹானா அவர்கள் சினிமாவில் நடிக்க வந்த பின்னர்  கோழிக்கோட்டில் ஒரு வீடு வாடகை எடுத்து தங்கியிருந்தனர்.

sahana
sahana

இந்நிலையில் நேற்று முன் சகானா தங்கியிருந்த வீட்டின் ஜன்னலில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் சஹானாவின் வீட்டிலிருந்து அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சாதனாவின் வீட்டிற்கு சென்று இருந்தனர். அப்போது சஹானா தன் கணவர் மடியில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் அனுப்பினர்.

சஹானாவின் வீட்டிற்கு விரைந்து வந்த போலீஸார் சஹானாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சஹானாவின் பெற்றோர் சஹானாவின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும் அவர் கணவர் தான் கொலை செய்திருக்க வேண்டும் என்றும் போலீசாரிடம் கூறியுள்ளார்.அதன் அடிப்படையில் சஹானாவின் இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

sahana
sahana

இந்த நிலையில் சஹானாவின் இறப்பில் மர்மம் இருப்பதை குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சஹானாவின் படுக்கை அறையில் போலீசார் சோதனை செய்யும்போது அங்கு போதைப் பொருள்கள்  இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டது.அந்த போதை பொருட்களை கைப்பற்றிய போலீசார் சஜாத்திடம் விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது அங்கு இருந்த அக்கம்பக்கத்தினறையும் விசாரணை நடத்தியபோது சஹானா விற்கும் அவருடைய கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும் என்றும் அவருடைய வீட்டின் உரிமையாளர் ஏற்கனவே வீட்டை காலி செய்யுமாறு கூறி இருந்தார் என போலீஸாரிடம் கூறியுள்ளனர்.

இந்நிலையில் மேலும் பிரேத பரிசோதனையில் சாதனாவின் உடலில் ஒரு சிறு காயங்கள் இருந்தது தெரியவந்தது இதன் தொடர்பான அறிக்கையை டாக்டர்கள் போலீசிடம் கூறியுள்ளனர். அதனை போலீஸ் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். முதற்கட்ட நடவடிக்கையால் போலீசார் சஹானாவின் கணவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் இன்று பிற்பகல் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர்.

Leave a Comment