லைஃப் பார்ட்னர் பத்தி அவ்ளோ சொல்லியும் காதுகொடுத்து கேட்காத vj சித்ரா..! கண்ணீருடன் உண்மையை போட்டுடைத்த ஷாலு ஷம்மு..!

sahalu shammu speech in vj chithra: பிரபல தனியார் தொலைக்காட்சியான மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் தான் சித்ரா.  இவருடைய சிறந்த திறமை மூலமாக படிப்படியாக சின்னத்திரையில் நுழைய ஆரம்பித்தார்.

இதை தொடர்ந்து பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ரசிகர்கள் மிக விரும்பி பார்க்கப்படும் பாண்டியன் ஸ்டோர் எனும் சீரியலில் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார் இந்த சீரியலில் இவர் முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு ரசிகர் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த நமது நடிகை சமீபத்தில் ஹோட்டல் ஒன்றில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு நடந்த சம்பவத்தின் மூலமாக திரை உலகமே ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கிறது.

இந்நிலையில் பல்வேறு பிரபலங்களும் சித்ராவின் சடலத்திற்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் அவருடைய நெருங்கிய தோழியான ஷாலு ஷம்மு சமீபத்தில் சித்ராவிடம் நான் உன்னை இழந்து விடுவேன் என்று ஒருபோதும் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் கடைசியாக நான் உன்னுடைய கணவரை குறித்து உன் முடிவை மாற்றுவதற்கு முயற்சித்தேன் அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு நொடியும் உன்னை சமாதான படுத்தவும் முயற்சி செய்தேன் ஆனால் நீ எதையும் ஏற்றுக் கொள்ளவே இல்லை.

நீ இப்படி செய்வாய் என்று எனக்கு முன்பே தெரிந்திருந்தால் நான் என் முயற்சியை கை விட்டிருக்க மாட்டேன்.  நீ இப்படி செய்ததன் காரணமாக என் மனம் உடைந்து போய்விட்டது.  என கண்ணீருடன் கதறி இணையத்தையே கலங்க வைத்துள்ளார் நடிகை ஷாலு ஷம்மு.

vj chithra
vj chithra

Leave a Comment