மாப்பிளை என்றால் இப்படிதான் இருக்கனும்.! சதா வெளிப்படை பேச்சு.!

ஒரு காலகட்டத்தில் இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சதா. சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தமிழில் ஒரு ரவுண்டு வந்தார். ஆனால் நடிகர் சதாவிற்கு சமீப காலமாகவே பெரிய படங்கள் எதுவும் அமையவில்லை. அதற்கு ஒரு சில சிறிய பட்ஜெட் படங்கள் மட்டுமே அமைந்துள்ளது அதில் நடித்து வருகிறார்.

இப்படி இருந்தும் நடிகை சதாவிற்கு இன்னும் அவருடைய ரசிகர்கள் பட்டாளம் குறையவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்  சதா அவர்கள் 38 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். மேலும் நடிகை சதாவும் திருமணம் செய்யாமல் இருந்தது குறித்து எந்த ஒரு காரணத்தையும் சொல்லவில்லை.

நடிகை சதா அவர்கள் தனது திருமணம் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலை பேசியுள்ளார். அது தொடர்பாக பேசி அவர்  என்னை நிறைய பேர் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று அறிவுரை சொல்கிறார்கள் ஆனால் என்னுடைய திருமணம்  குறித்து முடிவெடுக்க வேண்டியது என்னுடைய தனிப்பட்ட விஷயம் அது மட்டுமல்லாமல் திருமணம் குறித்து முடிவெடுக்க எனக்கு மட்டும்தான் உரிமை உள்ளது என்று கூறியுள்ளார்.

தற்போது உள்ள காலத்தில் 10 திருமணம் நடைபெற்றால் அதில் 5 ஜோடிகள் சந்தோசமாகவே வாழ்வதில்லை. இந்த நிலையில் யாரோ ஒருவர் என்னை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் ஏன் நினைக்க வேண்டும். பார்ட்டி பப் என நான் எங்கும் தற்போது செல்வதில்லை திருமணம் செய்து கொண்டால் அதன் பிறகு சந்தோஷமாக இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.

மேலும் நடிகை சதா திருமணம் என்கிற பெயரில் மற்றவரை சார்ந்து வாழ்ந்தால் என்னுடைய கஷ்டத்தையும் அவர் சுமக்க வேண்டும் ஒருவேளை நான் திருமணம் திருமணம் செய்து கொள்வதாக இருந்தால் என்னுடைய கணவர் பணக்காரனாக இருக்க வேண்டாம் ஆனால் என்னை சார்ந்து வாழ கூடாது என்றும் குறிப்பாக சைவ உணவு உண்பவராக இருக்க வேண்டும் என்றும் நடிகை சதா அவர்கள் கூறியுள்ளார்.

Leave a Comment

Exit mobile version