பாகிஸ்தானில் நடைபெற்ற முதல் டெஸ்ட் பற்றி நினைவு கூர்ந்த சச்சின்.! உருக்கமான பதிவு.!

கிரிக்கெட் உலகின் கடவுள் என வர்ணிக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். இவர் கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளை படைத்துள்ளார். தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கியுள்ள சச்சின். இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான நாசர் ஹூசைன் உடனான கலந்துரையாடலின் பொழுது பாகிஸ்தானில் நடைபெற்ற முதல் கிரிக்கெட் டெஸ்ட் பற்றி பகிர்ந்து கொண்டார் அதில் அவர் கூறியது.

பாகிஸ்தான் அணியில் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளரான இம்ரான்கான், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் ஆகியோர் பந்துவீசி வந்தனர்.பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் அனுபவம் மட்டுமில்லாமல் அதிக வேகமாக வீசக்கூடிய அனுபவம் இருந்ததால் அவரது வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் முதலில் திணறினேன். அவர்களது பந்துவீச்சு எனது உடலை பதம் பார்த்தது அப்பொழுது நான் ரன்கள் 14 ஆட்டமிழந்து வெளியேறினேன். ட்ரஸிங் ரூமுக்கு சென்று நான் யாரிடமும் பேசாமல் பாத்ரூமுக்குள் சென்று தனது மோசமான ஆட்டத்தை நினைத்து கண்ணீர் சிந்தினேன்.

இப்போட்டியுடன் எல்லாம் முடிந்து விட்டது இனிமேல் என்னை அடுத்த டெஸ்ட் போட்டிகளில் விளையாட அழைக்க மாட்டாரா என நினைத்து சோகத்தில் ஆழ்ந்து இருப்பதை புரிந்துகொண்ட மூத்த வீரர் ரவி சாஸ்திரி ஆறுதல் கூறினார் நீ தலைசிறந்த பந்து வீச்சாளர்களை எதிர்த்து விளையாடுகிறார் என்பதை நினைவில் வைத்துக்கொள் உன்னுடைய ஆட்டம் பள்ளிக்கூட போட்டி போலிருந்தது நீ களத்தில் சென்று அரை மணி நேரம் பொறுமையாக விளையாடு அவர்களின் வேகம் உனக்கு பழகி விடும் அதன் பின் விளையாட எளிதாக இருக்கும் என கூறினார் அவர் சொன்னது போல் நிதானமாக விளையாடி 59 ரன்கள் குவித்தார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment