கிசுகிசுவிலிருந்து தனது மகன் விஜய்யை காப்பாற்றிய எஸ் ஏ சந்திரசேகர் – அப்போ எடுத்த முடிவு தான்.! தளபதியை காப்பத்தியதாம்.

சினிமா உலகை பொறுத்தவரை ஒரு நடிகர், நடிகை தொடர்ந்து படங்களில் நடித்தால் பத்திரிகையாளர்களுக்கு அது பயனுள்ளதாக மாறுகிறது ஏனென்றால் இதை வைத்து பத்திரிகையாளர்கள் கிசுகிசுக்கள் எழுதித் தள்ளி விடுவார்கள். அப்படி பல்வேறு டாப் நடிகர்கள் தொடங்கி இளம் நடிகைகள் வரை பலரும் சிக்கி சின்னாபின்னமாகி உள்ளனர்.

இதன் மூலம் பலர் சினிமாவை இழந்து உள்ளனர். ஆனால் ஒரு சிலரோ ஒரு கட்டத்தில் பாதியில் உணர்ந்து வெளிவந்து தனது சினிமா பயணத்தை காத்து உள்ளனர்.  இந்த லிஸ்டில் இணைந்து சிக்கி தவித்தவர் தளபதி விஜய். சினிமா ஆரம்பத்தில் நடிகர் விஜயை தொடர்ந்து நடிகை சங்கவி உடன் கைகோர்த்து தொடர்ந்து நான்கைந்து படங்களில் நடித்தார்.

அந்த வகையில் இவர்கள் இருவரும் நடித்தது ரசிகன், கோயம்புத்தூர் மாப்பிள்ளை, நிலவே வா, விஷ்ணு நான்கு படங்களில் நடித்தார் அப்பொழுது பத்திரிகையாளர்கள் நடிகர் விஜய் மற்றும் சங்கவி காதல் லீலையில் ஈடுபட்டுள்ளனர்.

என கிசுகிசுக்களை தாறுமாறாக எழுத ஆரம்பித்தனர் இதை ஒரு கட்டத்தில் உணர்ந்துகொண்ட விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இனி நீங்கள் சேர்ந்து அடுத்த படத்தில் நடித்தால் அது உனது மார்க்கெட்டை பாதிக்கும் என்று எண்ணி தளபதி விஜய்யை நீ இனி சங்கவியுடன் சேர்ந்து நடிக்காதே என அதிரடியாக உத்தரவு போட்டார்.

தனது அப்பா சொல்வது சரிதான் என்பதை உணர்ந்துகொண்டு அதன் பிறகு சங்கவியுடன் இணைந்து நடிக்கவே இல்லையாம். அன்று அவரது அப்பா எடுத்த முடிவுக்கு கட்டளைக்கு பணிந்து விஜய் சரியாக தேர்வு செய்து பயணித்ததால் தான் இன்று அவர் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார்.

Leave a Comment