குடிபோதையில் 4 மாத கர்ப்பணி மனைவியை கடப்பாரையால் அடித்து கொன்ற காதல் கணவன்.!

காதல் மனைவியை அடித்துக் கொன்ற கணவன் இச்செய்தி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் அருகே கிளம்பி புதூர் கிராமத்தில் வசித்து வந்தவர்கள் தான் இந்த காதல் ஜோடி ஹரி( 25) மற்றும் தேவி (21). தேவி ஆரம்பத்திலேயே ஹரி மீது காதல் வயப்பட்டு இருந்ததால் தேவியின் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை இதனையடுத்து தேவி 7 மாதங்களுக்கு  முன்பே வீட்டை விட்டு வெளியேறி ஹரியை திருமணம் செய்து கொண்டு நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் தேவிக்கும் ஹரிக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது.

இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால் ஹரி குடித்துவிட்டு வருவதே முக்கிய காரணமாக இருந்து வந்துள்ளது.இது  வழக்கமாக நடந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் ஃபுல்லா குடித்துவிட்டு கர்ப்பிணி பெண்ணான தனது மனைவி தேவியிடம் வந்து சண்டை போட்டுள்ளார். அதற்கு அந்த பெண்  ஏன் இவ்வாறு குடித்துவிட்டு வருகிறிர்கள்  என சத்தம் போட்டுள்ளார் இதற்கு ஆத்திரமடைந்த ஹரி அருகிலிருந்த கடப்பாரை எடுத்து தேவியின் தலையில் ஓங்கி அடித்தார். அதே இடத்திலேயே தேவி உயிரிழந்தார்.

விரைந்து வந்த காவல்துறையினர் தேவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர் மேலும் ஹரி கைது செய்தனர். இச்செய்தி குறித்து பேசிய காவல்துறையினர் தேவியின் பெற்றோருக்கு திருமணத்தில் ஈடுபாடு இல்லாததால் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் ஹரியை  காதலிக்கும் பொழுது குடிப்பழக்கம் இருந்தது தெரியவில்லை பின் திருமணம் செய்து கொண்டபோது தெரியவந்ததால் அவ்வப்பொழுது சண்டை நடந்துள்ளது ஆனால் நேற்று அந்த சண்டையை வலுவடைந்தது ஆத்திரமடைந்த ஹரி தனது மனைவியான தேவியை கடப்பாரையால் தலையில் அடித்துள்ளார் தேவி  அங்கேயே  இறந்து போனார்.

இதை அறிந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை இவ்வாறு தாக்கியது மனிதநேயமற்ற செயல் என அவரை விமர்சித்து வருகின்றனர். மேலும் அவரது வயிற்றில் 4 மாத குழந்தை இருந்தது தெரியாமல் இவ்வாறு செய்தது மிகவும் கேவலமான செயல் என அவரை கண்டமேனிக்கு கேட்டு வருகின்றனர்.

Leave a Comment

Exit mobile version